NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு
    இந்தியா

    மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு

    மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு
    எழுதியவர் Nivetha P
    Jan 20, 2023, 05:12 pm 0 நிமிட வாசிப்பு
    மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

    கடந்த நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் 2022ம் ஆண்டிற்கான மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. நவம்பர் 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். 41 நாள் மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 28ம் தேதி நடை அடைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து 21 நாட்களாக நடைபெற்ற மகரவிளக்கு பூஜை நேற்றோடு நிறைவுப்பெற்றது. அதன்படி, ஜனவரி 19ம் தேதியான நேற்று இரவு 10 மணியோடு பக்தர்களுக்கான தரிசன அனுமதியும் நிறைவுற்றது.

    இன்று நடைதிறக்கப்பட்டப்பொழுது பந்தளம் ராஜா குடும்பத்தினர் மட்டும் சாமிதரிசனம் செய்ய அனுமதி

    இதனை தொடர்ந்து, ஜனவரி20ம் தேதியான இன்று காலை வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 6 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று இரவு 10 மணிக்கு நடைபெற்ற குருதி வைபவத்திற்கு பிறகு மாளிகைபுரம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள், அதே போல் பக்தர்கள் மலையேறவும் அனுமதி கிடையாது. அதன்படி, இன்று காலை 5 மணிக்கு நடத்தப்பட்ட பூஜையின் பொழுது பந்தளம் ராஜா குடும்பத்தினர் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இதனையடுத்து 18 படிகளை சாட்சியாக வைத்து, கோயில் சாவி அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வும், சுவாமி ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை அன்று அணிவிக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தள அரண்மனைக்கு மீண்டும் கொண்டு செல்லும் வைபவமும் நடைபெற்றது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? ஓய்வூதியம்
    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி தூத்துக்குடி

    இந்தியா

    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? ஹோண்டா
    ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது மாநிலங்கள்
    கூகுளின் சிறந்த விருதை பெற்றும் ஊழியர் பணிநீக்கம்! கண்ணீர் விட்ட ஊழியர் கூகுள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023