NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

    மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 20, 2023
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் 2022ம் ஆண்டிற்கான மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.

    நவம்பர் 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். 41 நாள் மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 28ம் தேதி நடை அடைக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.

    இதனையடுத்து 21 நாட்களாக நடைபெற்ற மகரவிளக்கு பூஜை நேற்றோடு நிறைவுப்பெற்றது.

    அதன்படி, ஜனவரி 19ம் தேதியான நேற்று இரவு 10 மணியோடு பக்தர்களுக்கான தரிசன அனுமதியும் நிறைவுற்றது.

    கோயில் சாவி ஒப்படைப்பு

    இன்று நடைதிறக்கப்பட்டப்பொழுது பந்தளம் ராஜா குடும்பத்தினர் மட்டும் சாமிதரிசனம் செய்ய அனுமதி

    இதனை தொடர்ந்து, ஜனவரி20ம் தேதியான இன்று காலை வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 6 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    நேற்று இரவு 10 மணிக்கு நடைபெற்ற குருதி வைபவத்திற்கு பிறகு மாளிகைபுரம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள், அதே போல் பக்தர்கள் மலையேறவும் அனுமதி கிடையாது.

    அதன்படி, இன்று காலை 5 மணிக்கு நடத்தப்பட்ட பூஜையின் பொழுது பந்தளம் ராஜா குடும்பத்தினர் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

    இதனையடுத்து 18 படிகளை சாட்சியாக வைத்து, கோயில் சாவி அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வும், சுவாமி ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை அன்று அணிவிக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தள அரண்மனைக்கு மீண்டும் கொண்டு செல்லும் வைபவமும் நடைபெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் இந்தியா
    பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு வாகனம்
    காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை இந்தியா
    ஜம்மு-காஷ்மீர்: புத்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025