காரைக்கால் மாவட்டத்திற்கு டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி-காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சனீஸ்வரர் பகவான் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதற்கிடையே வரும் டிசம்பர் 20ம்.,தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனையொட்டி அந்த கோயிலில் அன்று சனிப்பெயர்ச்சி விழா மாலை 5.20 மணியளவில் நடக்கவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சனிப்பெயர்ச்சி திருவிழாவாக இங்கு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் இங்கு ஒன்று கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த திருவிழா காரணமாக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.