பாரத ரத்னா விருதை தனக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார் எல்.கே.அத்வானி
செய்தி முன்னோட்டம்
பாரத ரத்னா விருதை தனக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறார் எல்.கே. அத்வானி. மேலும், இது அவரது தனது இலட்சியங்களுக்கு 'கௌரவம்' அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
இந்நிலையில், இது தனது இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளுக்கான 'கௌரவம்' என்று கூறியுள்ள அத்வானி, "மிகப் பணிவு மற்றும் நன்றியுடன், இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது எனக்குக் கிடைத்த மரியாதை மட்டுமல்ல. என் வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்தவரை சேவை செய்ய நான் பாடுபட்ட இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளுக்காக கிடைத்த மரியாதை." என்று தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி
'குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் நன்றி'
தனக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அத்வானி நன்றி தெரிவித்தார்.
"எனது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், குறிப்பாக எனது அன்பான மனைவி கமலாவுக்கும் எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் எனது வாழ்க்கையில் வலிமையின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார்.
"நான் 14 வயதில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தன்னார்வத் தொண்டராக சேர்ந்ததிலிருந்து, வாழ்க்கையில் எனக்கு ஒதுக்கப்பட்ட எந்தப் பணியிலும் எனது அன்பான நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் தன்னலமற்ற சேவையில் நான் ஈடுபட்டிருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.