NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை
    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை

    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை

    எழுதியவர் Nivetha P
    Sep 02, 2023
    02:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 26 ஆயிரத்து 349 பள்ளிகளில் கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனரான கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2011ம் ஆண்டு தமிழக மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

    அதில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதோர் என்பது தெரிய வந்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்டோர் பலருக்கு அடிப்படை எழுத்தறிவு, படிப்பறிவு உள்ளிட்டவைகளான கல்வியறிவினை வழங்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பள்ளி 

    கற்பிக்கும் பணிகளில் தலா ஓர் தான்னார்வலர் செயல்படுவார் 

    இத்திட்டத்தின்படி, சுத்தமாக அடிப்படை படிப்பறிவு, எழுத்தறிவு கூட இல்லாத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கல்வி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து தற்போது அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகள் என 26 ஆயிரத்து 349 பள்ளி வளாகங்களில் கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையங்களில் கல்வியினை கற்பிக்கும் பணிகளில் தலா ஓர் தான்னார்வலர் என்னும் வீதத்தில் சேவை மனப்பான்மை உடையோர் செயல்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் பள்ளி இயங்கும் நாட்களில் இந்த கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மாலை நேரத்தில் 2 மணிநேரம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த மையங்களில் கற்கும் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு குறித்த தேர்வு நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பள்ளிக்கல்வித்துறை

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    தமிழ்நாடு

    நீட் தேர்வு - அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்கள் வரிசையில் 3ம் இடத்தினை பிடித்த தமிழ்நாடு  இந்தியா
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டம்; முழு விவரம் உள்ளே  மு.க ஸ்டாலின்

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025