NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை
    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை
    இந்தியா

    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை

    எழுதியவர் Nivetha P
    September 02, 2023 | 02:37 pm 0 நிமிட வாசிப்பு
    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை
    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை

    தமிழ்நாடு மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 26 ஆயிரத்து 349 பள்ளிகளில் கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனரான கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2011ம் ஆண்டு தமிழக மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதோர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்டோர் பலருக்கு அடிப்படை எழுத்தறிவு, படிப்பறிவு உள்ளிட்டவைகளான கல்வியறிவினை வழங்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    கற்பிக்கும் பணிகளில் தலா ஓர் தான்னார்வலர் செயல்படுவார் 

    இத்திட்டத்தின்படி, சுத்தமாக அடிப்படை படிப்பறிவு, எழுத்தறிவு கூட இல்லாத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கல்வி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகள் என 26 ஆயிரத்து 349 பள்ளி வளாகங்களில் கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கல்வியினை கற்பிக்கும் பணிகளில் தலா ஓர் தான்னார்வலர் என்னும் வீதத்தில் சேவை மனப்பான்மை உடையோர் செயல்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி இயங்கும் நாட்களில் இந்த கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மாலை நேரத்தில் 2 மணிநேரம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கற்கும் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு குறித்த தேர்வு நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    பள்ளிக்கல்வித்துறை

    தமிழ்நாடு

    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு  ராமநாதபுரம்
    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் ஆதித்யா L1
    ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை தற்கொலை
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் கோயம்புத்தூர்

    பள்ளிக்கல்வித்துறை

    பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் பெங்களூர்
    தமிழில் கையொப்பம் இடுவது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு  தமிழ்நாடு
    அரசு பள்ளி ஆசிரியர்கள் துறை மாறுதலுக்கு செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை  தமிழக அரசு
    பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023