NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிலச்சரிவால் உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தாமதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலச்சரிவால் உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தாமதம் 
    புது டெல்லியில் இருந்து புதிய இயந்திரங்கள் இப்போது வரவழைக்கப்பட்டுள்ளன.

    நிலச்சரிவால் உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தாமதம் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 15, 2023
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 70 மணி நேரத்திற்கும் மேலாக தொடந்து நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் மீட்பு பணியில் இடையீறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 200 மீட்டர் பரப்பளவின் மீது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கினர்.

    அந்த தொழிலாளர்களை மீட்பதற்கு 70 மணிரத்திற்கும் மேலாக மீட்பு குழுக்கள் இடிந்து விழுந்த பாறைகளை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு துளையிட்டு வந்தன.

    ஆனால், நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவால், தோண்டப்பட்டிருந்த துளைகள் மூடப்பட்டு, மீட்பு பணி பெரிதளவில் பாதிக்கப்பட்டது.

    லஃக்னவ்

    புது டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய இயந்திரங்கள்

    இந்த துளையிடும் பணி முடிந்த பிறகு, 900 மிமீ விட்டம் கொண்ட ஒரு குழாயை உள்ளே அனுப்ப மீட்பு குழுக்கள் திட்டமிட்டிருந்தன.

    அந்த குழாய் வழியாக தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

    ஆனால், நேற்று நடந்த நிலச்சரிவால் துளையிடும் ட்ரில்லிங் இயந்திரம் பழுதடைந்தது.

    மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், புது டெல்லியில் இருந்து புதிய இயந்திரங்கள் இப்போது வரவழைக்கப்பட்டுள்ளன.

    உத்தரகாசி மாவட்ட மாஜிஸ்திரேட் அபிஷேக் ரூஹெலா, சிக்கிய தொழிலாளர்களை இன்று வெளியேற்றிவிடுவோம் என்று செய்தியாளர்களிடம் முன்பு தெரிவித்திருந்தார்.

    "எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், சிக்கிய தொழிலாளர்கள் புதன்கிழமைக்குள் வெளியேற்றப்படுவார்கள்," என்று நேற்று மாலை விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.

    ஆனால், அந்த திட்டம் தற்போது தாமதமாகி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    புது டெல்லி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    புது டெல்லி

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை  ஜி20 மாநாடு
    ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்? ஜி20 மாநாடு
    ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள் ஜி20 மாநாடு
    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025