NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு 
    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Aug 07, 2023
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

    என்.எல்.சி.நிறுவனம் நிலத்தில் விளைந்திருந்த பயிர்களை சேதப்படுத்தியது மேலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அறுவடைக்காலம் வரை விவாசாயிகளுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என உத்தரவிடுமாறு பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

    அதன்படி என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடுத்தொகை வரும் ஆகஸ்ட்.,6ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதன் விசாரணை மீண்டும் இன்று(ஆகஸ்ட்.,7)நடந்தது, அப்போது 88 விவாசாயிகளுக்கு பயிர்சேதத்திற்கான இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு விட்டது என்றும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு தொகை கோருவதை நீதிமன்றம் ஏற்க கூடாது என்றும் என்.எல்.சி.தரப்பில் வாதாடப்பட்டது.

    நிலம் 

    உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை 

    அதனைத்தொடர்ந்து, கருணைத் தொகை வழங்க கிராமங்களில் தமிழக அரசு அதிகாரிகளை கொண்டு குழுவினை நியமித்துள்ளது.

    செப்டம்பர் 15ம்தேதிக்குள் இத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    தொடர்ந்து, இருத்தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், நீதிபதி.,எஸ்.எம்.சுப்ரமணியம், 'விவசாயிகள் கண்முன்னே அவர்களது பயிர்கள் நாசமாவதை காணமுடியாதுதான்' என்றும்,

    அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தும் போராட்டங்களில் அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகிறது.

    அதற்கான இழப்பீட்டினை உரியவர்களிடம் இருந்தே அரசு வசூலிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அதேபோல், என்.எல்.சி.நிறுவனத்தால் கையப்படுத்தப்பட்ட நிலங்கள் அறுவடை முடிந்ததும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    அதில் விவசாயிகள் புதிய பயிர்கள் எதுவும் பயிரிடக்கூடாது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நெய்வேலி
    விவசாயிகள்
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நெய்வேலி

    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  விவசாயிகள்
    NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல் கடலூர்
    வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை  பாமக
    என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு விவசாயிகள்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா

    தமிழக அரசு

    மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள்  தமிழ்நாடு
    கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை - தமிழக அரசு திட்டம்  தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்கப்படும் தக்காளி தமிழ்நாடு
    இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025