NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு
    என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு

    என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Aug 02, 2023
    05:23 pm

    செய்தி முன்னோட்டம்

    நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை மேற்கொள்ள சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கடந்த 2007ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.

    இந்நிலையில் அண்மையில் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட என்.எல்.சி.நிறுவனம் நிலத்தில் விளைந்திருந்த பயிர்களை சேதப்படுத்தியது.

    இது பெரும் அதிர்ச்சியினை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியதையடுத்து, அறுவடை காலம் வரை விவாசாயிகளுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என உத்தரவிடுமாறு பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று(ஆகஸ்ட்.,2)வந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு தொகை வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் உரிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உத்தரவு 

    ஆகஸ்ட் 7ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு 

    அதனை தொடர்ந்து, கையகப்படுத்திய நிலங்களை பாதுகாக்க தவறியது என்.எல்.சி. நிறுவனத்தின் தவறு, அதே போல் அந்த நிலத்தில் பயிரிட்டது விவசாயிகள் செய்த தவறாகும்.

    எனவே, இருதரப்பினருமே தவறு இழைத்துள்ளனர் என்று கூறிய நீதிபதி, வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு மேல் விவசாயிகள் அந்த நிலத்தில் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்றும்,

    அதன் பின்னர் அந்த நிலத்தினை பாதுகாத்து கொள்வது என்.எல்.சி. நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, நில உரிமையாளர்கள் சட்ட ஒழுங்கினை மீறி ஏதேனும் செயலில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நீதிபதி, இழப்பீடு தொகையினை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்கிவிட்டால் ஆகஸ்ட் 7ம் தேதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடரும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவசாயிகள்
    நெய்வேலி

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா

    நெய்வேலி

    NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல் கடலூர்
    வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை  பாமக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025