NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்
    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்

    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்

    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023
    02:55 pm

    செய்தி முன்னோட்டம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16ஆண்டுகளுக்கு பிறகு 2023ம்ஆண்டு 27ம்தேதி(நேற்று) விமரிசையாக நடந்தது.

    கடந்த 23ம்தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய இவ்விழா, 90 யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டுகால பூஜைகள் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றன.

    இதனைதொடர்ந்து,காலை 4.30மணிக்கு 8ம் கால வேள்வியுடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா துவங்கியது.

    இதனையடுத்து மலைக்கோயில் பிரகாரத்தில் உள்ள ராஜகோபுரம், தங்கவிமானம் ஆகியவற்றிற்கு கங்கை, காவிரி போன்ற பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்ட பொழுது கூறியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா சரணம் கோஷம் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர்.

    3000 போலீசார்

    ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம், பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டது

    அதன் பின்னர், கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது, கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் பிரத்யேகமாக ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும், பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது.

    மேலும் மூலவர் சன்னதிகளுக்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக திருவிழாவில் தமிழில் மந்திரங்கள் முழங்கப்பட்டது சிறப்புமிக்கதாக அமைந்தது.

    இதில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்து, குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்பட்ட 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

    இவர்களோடு போலீசார், கோயில் பணியாளர்கள் என மொத்தம் 6 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற பக்தர்களுக்காக 16 இடங்களில் பெரும் அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டது.

    பக்தர்கள் வசதிக்காக 30சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது, 3000போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    தமிழ்நாடு

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் திருச்சி
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி திமுக
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி மதுரை
    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு பா ரஞ்சித்

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025