NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள் நேற்று(மார்ச்.,14) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நுழைந்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார்(27) இன்று(மார்ச்.,14) காலை மொட்டுப்பட்டி அருகேயுள்ள மலையடிவாரத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

    அப்போது அந்த மலையடிவார பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சுற்றித்திரிவதை ராம்குமார் பார்த்துள்ளார்.

    அதனையடுத்து அவர் அந்த யானைகளை தனது போனில் படம்பிடிக்க முயற்சி செய்ததோடு, செல்பி எடுக்கவும் முயற்சி செய்துள்ளார்.

    காரினை சேதப்படுத்திய யானைகள்

    சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த இளைஞர்

    காட்டுயானைகளை ராம்குமார் செல்பி எடுக்க முயன்றபொழுது அவரை அந்த யானைகள் தாக்கியுள்ளது.

    யானைகள் தாக்குதலில் படுகாயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரூர் போலீசார் ராம்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

    தொடர்ந்து அந்த மலையடிவாரத்தில் இருந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் துரத்தியுள்ளார்கள்.

    அப்போது சப்பாணிப்பட்டி அருகே தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையினை கடந்து பாலக்கோடு வனப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    மேலும் யானைகள் சாலையை கடக்கும்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்றினை தனது தும்பிக்கையால் தாக்கியுள்ளது.

    இதில் காரில் சேதம் ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக காரின் உள்ளே இருந்தவர்களுக்கு எவ்விதபாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள் இந்தியா
    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி சட்டமன்றம்
    தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ பள்ளி மாணவர்கள்
    வானிலை அறிக்கை: மார்ச் 9- மார்ச் 13 வானிலை அறிக்கை

    மாவட்ட செய்திகள்

    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு கோவை
    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் தமிழ்நாடு
    ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள் இந்தியா
    காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025