NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம்
    இந்தியா

    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம்

    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம்
    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023, 06:42 pm 1 நிமிட வாசிப்பு
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம்

    கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக ஆண்டுதோறும் நடக்கும். அதன்படி இந்தாண்டும் பல இடஙக்ளில் எருதுவிடும் விழா அரங்கேறிவருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 17,18தேதிகளில் வேப்பனப்பள்ளி, குமரப்பள்ளி பகுதிகளில் நடந்த இந்த விழாவில் விதிமுறைகள் சரியாக பின்பற்றாததால் சிறுவன் உள்பட 3பேர் மாடு முட்டி இறந்தனர். இதனால் இது போன்ற விழாக்களுக்கு முன்னதாகவே அனுமதி பெறவேண்டும் என்பது கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஓசூர் அருகே சின்னத்திருப்பதி கோயில் திருவிழாவில் எருதுவிடும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித அனுமதியும் பெறாதநிலையில் நேற்று(பிப்.,2) காவல்துறை அதிகாரிகள் அங்குசென்று விழாவை நிறுத்த அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர்

    இப்போராட்டம் காரணமாக அம்மாவட்ட ஆட்சியர் விழாவிற்கு அனுமதியளித்தார். எனினும் அவர்கள் கிருஷ்ணகிரி முழுவதும் எருதுவிடும் விழா நடத்த அனுமதி வேண்டும் என்றுகூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து கூட்டத்தை கலைக்க தடியடி நடத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். பின்னர் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட ஓர் இளைஞரை அதிகாரி ஒருவர் பூட்ஸ் காலால் உதைக்கும் வீடியோ திடீரென சமூகவலைத்தளங்களில் பரவியது. தற்போது இதுகுறித்து கிருஷ்ணகிரி எஸ்.பி.சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அந்த இளைஞர் பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். இதனை விசாரிக்கும் பொழுது, அவர் தப்பிச்செல்ல முயன்றதால் பூட்ஸ் காலால் எட்டி உதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கலவரம்
    காவல்துறை
    திருவிழா
    காவல்துறை

    சமீபத்திய

    பார்வதி நாயர் முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரை: பிரபலங்கள் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் கோலிவுட்
    ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : 8 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி உலக கோப்பை
    ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் வெள்ளி விலை
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு ஈரோடு

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்

    காவல்துறை

    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு

    திருவிழா

    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு

    காவல்துறை

    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை தமிழ்நாடு
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023