NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-போராட்டத்தில் ஈடுபட்டோரில் 200 பேர் கைது

    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023
    10:15 pm

    செய்தி முன்னோட்டம்

    கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக நடந்து வருகிறது.

    இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த விநாடிகளில் கடக்கும் காளைக்கு ரொக்கபரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    இதனையடுத்து இந்த விழாவிற்கு உரிய அனுமதி பெறவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதனிடையே ஓசூர் அருகே சின்னதிருப்பதி கோயில் திருவிழாவையொட்டி இன்று எருதுவிடும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.

    இந்நிலையில் அங்குள்ள காலியிடங்களை சீரமைத்து, 100க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

    இந்த காளைகளை பிடிக்க பல இளைஞர்கள் ஆவலாக இருந்தனர். இதனையடுத்து அங்குவந்த போலீசார் உரிய அனுமதி பெறாததால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று கூறி, அனைவரையும் கலைந்துபோக சொன்னதாக கூறப்படுகிறது.

    உயரதிகாரிகள் நேரில் ஆய்வு

    கூட்டத்தை கலைக்க தடியடி நடத்திய போலீசார்-200க்கும் மேற்பட்டோர் கைது

    போலீசார் கலைந்துபோக சொன்னதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் திடீரென கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்டு சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர்.

    மேலும் அந்தவழி வந்த வாகனங்களை மறித்து அதன்மேல் ஏறி நின்று மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

    இதனால் அம்மாவட்ட ஆட்சியர் விழாவிற்கு அனுமதி வழங்கியுள்ளார். எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருதுவிடும் விழாவிற்கு அனுமதிக்கவேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

    அப்போது சிலர் போலீசார்மீது கல் எரிந்ததில், அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு உயரதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுசெய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போராட்டம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை

    தமிழ்நாடு

    புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் அதிமுக
    ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம் இந்தியா
    திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர் கூகுள்
    பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025