NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம்
    கோழிக்கோடு ரயில் தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர்

    கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 06, 2023
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    கோழிக்கோடு ரயில் தீ விபத்தில் நேற்று கைதான சந்தேக நபர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் மர்ம நபர் ஒருவர், பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

    சம்பவம் அறிந்து விரைந்த போலீஸார் ரயில் பெட்டியில் மர்ம நபர் விட்டு சென்ற பெட்ரோல் பாட்டில், மொபைல் போன், டைரி உள்ளிட்ட பொருட்களை கண்டறிந்தனர்.

    அந்த பொருட்களை ஆய்வு செய்ததில் பயணிகள் மீது தீ வைத்தது வடமாநிலத்தை சேர்ந்த ஷாருக் ஷைபி என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஷாருக் ஷைபி மஹாராஷ்டிராவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இந்தியா

    ஷாருக் ஷைபியின் நண்பர் யார் என்பது இன்னும் தெரியவில்லை

    கைதான ஷாருக் ஷைபியை கேரளாவுக்கு அழைத்து வந்த போலீஸ் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணையில், விபத்து நடக்கும் போது ஷாருக் ஷைபியுடன் அவரது நண்பர் ஒருவர் இருந்தார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

    ஷாருக் ஷைபியின் நண்பர் தான் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்ற சொன்னதாக ஷாருக் ஷைபி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

    ரயில் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களை பயமுறுத்த அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றியதாகவும் ஷாருக் ஷைபி கூறியுள்ளார்.

    ஷாருக் ஷைபியின் நண்பர் யார், அவர் ஏன் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்ற சொன்னார் என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

    அது குறித்து போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கேரளா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    45 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா - காரணம் என்ன? வாட்ஸ்அப்
    இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு ராகுல் காந்தி
    செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்! கூகுள்

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி வைரல் செய்தி
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025