NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மனைவியை கொலை செய்ததற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருக்கும் கணவன்; சம்பந்தப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனைவியை கொலை செய்ததற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருக்கும் கணவன்; சம்பந்தப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
    மனைவியை கொன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட கணவன்; சம்பந்தப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

    மனைவியை கொலை செய்ததற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருக்கும் கணவன்; சம்பந்தப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 05, 2025
    09:21 am

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவில் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண் உயிரோடு இருப்பது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து 2020 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை விசாரணையில் உள்ள குறிப்பிடத்தக்க குறைபாடுகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குடகு நீதிமன்றம் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்த அறிக்கை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மல்லிகா என்ற அந்த பெண் கடந்த டிசம்பர் 2020 இல் குஷால்நகரில் இருந்து காணாமல் போனார்.

    பெட்டதரபுராவில் அவரது எலும்புக்கூட்டை மீட்டதாக போலீசார் கூறினர். அதன் அடிப்படையில் அவர்கள் சுரேஷை கைது செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    திருப்பம்

    வழக்கின் முக்கிய திருப்பம்

    இருப்பினும், விசாரணை ஏப்ரல் 1, 2025 அன்று வியத்தகு திருப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது மல்லிகா மடிகேரியில் மற்றொரு ஆணுடன் வசிப்பது கண்டறியப்பட்டது.

    சுரேஷின் நண்பர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார், மேலும் மல்லிகா ஐந்தாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    தனது கணவர் எதிர்கொள்ளும் சட்டரீதியான விளைவுகளை அறியாமல் ஓடிப்போனதாக அவர் ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில், டிஎன்ஏ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்காமல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததற்காக காவல்துறையினரை நீதிமன்றம் கண்டித்தது.

    மேலும், விசாரணை அதிகாரிகளுக்கு இதுகுறித்து சம்மன் அனுப்பப்பட்டபோது, ​​திருப்திகரமான விளக்கங்களை அவர்கள் வழங்கவில்லை.

    பழங்குடியினர் ஆணையம்

    பழங்குடியினர் நல ஆணையத்தை அணுக திட்டம்

    முன்னதாக, சுரேஷ் தனது மனைவி காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், அவரையே காவல்துறை கைது செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுத்ததாக ஒருபுறம் குற்றம் சாட்டப்படுகிறது.

    சுரேஷிற்கு ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளை உள்ள நிலையில், தங்கள் தந்தை நிரபராதி என்று அவர்களும் முறையிட்டுள்ளனர்.

    சுரேஷ் கைது செய்யப்பட்டதால், அவரது பிள்ளைகளில் தங்கையை படிக்க வைப்பதற்காக அண்ணன் தனது கல்வியை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட சுரேஷ் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சுரேஷின் வழக்கறிஞர் பண்டு பூஜாரி, நீதி மற்றும் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் மனித உரிமைகள் மற்றும் பழங்குடியினர் ஆணையங்களையும் அணுகுவதாகவும் அறிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    காவல்துறை
    காவல்துறை
    கைது

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கர்நாடகா

    தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்கிய பாஜக எம்.பி இந்தியா
    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தங்கலான் ட்ரைலர் வெளியானது தங்கலான்
    குறிப்பிட்ட தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கு 100% ஒதுக்கீடு: கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு சித்தராமையா
    50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா  இட ஒதுக்கீடு

    காவல்துறை

    மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்  மேற்கு வங்காளம்
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி, அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர் காவல்துறை
    உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு விபத்து
    முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அதிமுக

    காவல்துறை

    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது கைது
    கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திருப்பம் கொலை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  அரவிந்த் கெஜ்ரிவால்
    14 வயது சகோதரியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய சென்னை பெண் கைது சென்னை

    கைது

    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன? டெலிகிராம்
    விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு கொலை
    பெங்களூரு கட்டிட விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, கட்டிட உரிமையாளர் கைது பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025