NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / RSS, மகாத்மா காந்தி பற்றிய விவரங்கள் பள்ளி புத்தங்கங்களில் இருந்து நீக்கப்பட்டதா
    அடுத்த செய்திக் கட்டுரை
    RSS, மகாத்மா காந்தி பற்றிய விவரங்கள் பள்ளி புத்தங்கங்களில் இருந்து நீக்கப்பட்டதா
    பாடப்புத்தகத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    RSS, மகாத்மா காந்தி பற்றிய விவரங்கள் பள்ளி புத்தங்கங்களில் இருந்து நீக்கப்பட்டதா

    எழுதியவர் Sindhuja SM
    Apr 06, 2023
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதிதாக வெளியிடப்பட்ட 12ஆம் வகுப்பு அரசறிவியல்(Political science) பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி, RSS, இந்து-முஸ்லீம் நல்லிணக்கம் பற்றிய வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் சமீபத்தில் வெளியானது.

    ராம நவமியின் போது இந்தியா முழுவதும் ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களுக்கு இடையில் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

    புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் வரிகள்:

    1. "காந்திஜியின் மரணம் நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில் ஒரு மாயாஜால தாக்கத்தை ஏற்படுத்தியது."

    2. "RSS [ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்] போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டன"

    3. "இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தி பாடுபட்டது இந்து தீவிரவாதிகளை தூண்டியது"

    இந்தியா

    காந்தியின் கொலையில் RSSன் பங்கை மறைக்கும் முயற்சி: எம்பி பினோய் விஸ்வம்

    சமீபத்தில் பீகார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த வன்முறைகள் இந்து-முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே புதிய சச்சரவைத் தூண்டியுள்ளது.

    இதற்கிடையில், பாடப்புத்தகத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த சர்ச்சையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆனால், இந்த ஆண்டு பாடத்திட்டத்தை ஒழுங்கமைக்கவில்லை என்று NCERT கூறியுள்ளது. மேலும் பாடத்திட்டம் ஜூன் 2022இல் தான் கடைசியாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, "12ஆம் வகுப்பு வரலாற்றிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடப்புத்தகம் நாதுராம் கோட்சேவின்(காந்தியை கொன்றவர்) கருத்தியல் சார்புகளை மறைக்கிறது. இதைப் பற்றிய குறிப்புகள் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டது, அந்த கொடூரமான செயலில் RSSன் பங்கை எதிர்கால சந்ததியினரிடமிருந்து மறைக்கும் முயற்சியே தவிர வேறில்லை." என்று எம்பி பினோய் விஸ்வம், மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆர்எஸ்எஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம் வந்தே பாரத்
    ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? சேமிப்பு திட்டங்கள்
    காரைக்காலில் முகக்கவசம் கட்டாயம்: ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கை புதுச்சேரி
    பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட் வாட்ஸ்அப்

    ஆர்எஸ்எஸ்

    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025