NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை 
    எர்ணாகுளம் மத்திய காவல்துறை இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 31, 2023
    11:07 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது முகநூல் பதிவின் மூலம் மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக எர்ணாகுளம் மத்திய காவல்துறை இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை காலை நடந்த ஒரு கிறிஸ்தவ குழுவின் வழிபாட்டு கூட்டத்தில் திடீரென்று 3 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புகளால் 3 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததை அடுத்து, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

    "வெட்கக்கேடான காங்கிரஸ்/சிபிஎம்/யுபிஏ/INDIA கூட்டணி ஆகியோர் கேரளாவில் வெறுப்பை பரப்பி, "ஜிஹாத்" நடத்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்" என்று அவரது முகநூல் பதிவில் கூறப்பட்டிருந்தது.

    பைவ்ஜன்

    மத நல்லிணக்கத்தை கெடுத்ததற்காக வழக்கு பதிவு 

    "உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வைத்து, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கே தெரியும், இறுதியில் அந்த பாம்புகள் கொல்லைப்புறத்தில் உள்ளவர்களைத் தாக்கும் என்று". என்ற ஹிலாரி ரோதம் கிளிண்டனின் வார்த்தைகளையும் அவர் தனது முகநூல் பதிவில் மேற்கோள் காட்டி இருந்தார்.

    மேலும், அந்த பதிவில் #HamasTerrorists மற்றும் #KochiTerrorAttacks ஆகிய ஹேஷ்டேக்குகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

    இந்நிலையில், மத நல்லிணக்கத்தை கெடுத்ததற்காக IPCஇன் சட்டப்பிரிவு 153(a) மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைத்ததற்காக கேரள காவல்துறை சட்டம் 120 ஆகியவற்றின் கீழ் சந்திரசேகர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டுமே ஜாமீனில் வரக்கூடிய குற்றங்களாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    குண்டுவெடிப்பு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கேரளா

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது ஆடி
    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி இந்தியா
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    காவல்துறை

    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்! பெங்களூர்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது கடத்தல்

    காவல்துறை

    கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்  கோவை
    லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி  ரஜினிகாந்த்
    சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது ரயில்கள்
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025