NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு
    கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு

    கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 12, 2023
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை உடல் ரீதியாக காயப்படுத்த சதி செய்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஆளும் சிபிஐ(எம்)ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) உறுப்பினர்களால் அவரது வாகனம் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கவர்னர் சென்று கொண்டிருந்த போது நடந்த இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ஆரிப், தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது தற்செயலான சம்பவம் அல்ல, வேண்டுமென்றே தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட செயல் என்றும் அவர் கூறினார்.

    card 2

    பாதுகாப்பு குறைபாடு என ஆளுநர் குற்றசாட்டு 

    "முதலமைச்சர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தால், இந்த போராட்டக்காரர்கள் கார்கள் அங்கு அனுமதிக்கப்படுமா?, அவர்கள் (போலீசார்) யாரையும் முதலமைச்சரின் கார் அருகே வர அனுமதிப்பார்களா? இங்கே போராட்டக்காரர்களின் கார்கள் நின்று கொண்டிருந்தன, போலீசார் தள்ளி நின்றுகொண்டிருந்தார்கள். போராட்டக்காரர்கள், தங்கள் கார்களில் தப்பி ஓடிவிட்டனர்" என்று ஆளுநர் கூறினார்.

    "எனவே, என்னை உடல்ரீதியாக காயப்படுத்த சதி செய்து இவர்களை அனுப்புவது முதல்வர் தான், என நான் திட்டவட்டமாக சொல்கிறேன். திருவனந்தபுரத்தின் சாலைகளை முழுவதும் 'குண்டர்கள்' கட்டுப்பாட்டில் உள்ளது" என ஆளுநர் ஆரிப் முகமது கான் மேலும் கூறினார்.

    காவல்துறையின் கூற்றுப்படி, ஆளுநரின் வாகனம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் SFI செயல்பாட்டாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அது தொடர்பாக மாணவர் அமைப்பைச் சேர்ந்த 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    "முதலமைச்சரின் சதி" என கவர்னர் குற்றசாட்டு

    #JustIN | காரை வழிமறித்து போராட்டம் - ஆவேசம் அடைந்த கேரளா ஆளுநர்!#SunNews | #ArifKhan | #Kerala pic.twitter.com/cQg4kyjDYd

    — Sun News (@sunnewstamil) December 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    ஆளுநர் மாளிகை
    பினராயி விஜயன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கேரளா

    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் குண்டுவெடிப்பு
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   பினராயி விஜயன்
    கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல் பினராயி விஜயன்
    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  தமிழ்நாடு

    ஆளுநர் மாளிகை

    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆர்.என்.ரவி
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு

    பினராயி விஜயன்

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து கேரளா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025