NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர் 

    "கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 21, 2024
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.

    NDTV-யிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயனின் நிர்வாகத்தின் மீது கடுமையாக தாக்கி பேசியதோடு, "பகலில் அவர்கள்(கேரள அரசு) SFI உடன் இருக்கிறார்கள். இரவில் அவர்கள் PFI க்காக வேலை செய்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    "கேரள மக்களிடமிருந்து இது குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மட்டுமே என்னிடம் இருக்கு ஆதாரம். இப்போது என்னால் உங்களுக்கு சரியான பெயர்களைக் கொடுக்க முடியாது. ஆனால் (மத்திய) ஏஜென்சிகளிடம் இந்தத் தகவல் உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.

    கேரளா

     கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையே நடந்து வரும் மோதல் 

    பல்கலைக்கழகங்களில் அதிகாரிகளை நியமனம் செய்வதில் ஆளும் கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு( SFI) தொடர்ந்து ஆளுநர் செல்லும் இடத்திற்கெல்லாம் சென்று அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.

    அதனால், ஆத்திரமடைந்த கேரள ஆளுநர் சமீபத்தில் நடு ரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ்பவனுக்கும் ஆளுநருக்கும் Z+ பாதுகாப்பை வழங்கியது.

    இந்நிலையில், கேரள அரசுக்கும் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    கேரளா

    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு  கடத்தல்
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா
    'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025