NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி
    பத்ம லட்சுமி, எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

    கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2023
    07:38 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை பத்ம லட்சுமி என்பவர் பெற்றுள்ளார்.

    மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வழக்கறிஞரின் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நேற்று(மார் 19) இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்ட சட்டப் பட்டதாரிகள் சேர்க்கை சான்றிதழை பெற்றனர். அதில் பத்ம லட்சுமியும் ஒருவராவார்.

    பத்ம லட்சுமி, எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

    "பத்ம லட்சுமியின் வாழ்க்கை திருநங்கைகள் பலரை வக்கீல் பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கட்டும்." என்று அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.

    இந்தியா

    இந்தியாவின் முதல் மூன்று திருநங்கை நீதிபதிகள்

    திருநர்களுக்கு ஆதரவளிக்காத ஒரு சமூகத்தில் தனக்கென ஒரு பாதையை தானே உருவாக்கிக்கொண்ட இளம் வழக்கறிஞரின் முயற்சிகளை அமைச்சர் ராஜீவ் பாராட்டினார்.

    இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியான ஜோயிதா மோண்டலுக்குப் பிறகு பத்ம லட்சுமியின் சாதனைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஜோயிதா மோண்டல், 2017ல் மேற்கு வங்கத்தில் உள்ள இஸ்லாம்பூர் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாக்பூரில் நடைபெற்ற லோக் அதாலத்தில் திருநங்கை ஆர்வலர் வித்யா காம்ப்ளே உறுப்பினர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    அந்த ஆண்டின் பிற்பகுதியில், குவாஹாட்டியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா என்ற மூன்றாவது திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கேரளா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    திவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்! அமெரிக்கா
    ChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது? சாட்ஜிபிடி
    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு தமிழ்நாடு

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025