NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் ​​தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் ​​தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம் 

    'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் ​​தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, இன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பாலஸ்தீனத்தின் கதிதான் காஷ்மீருக்கும் ஏற்படும் என்று கூறினார்.

    கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

    அந்த சம்பவம் குறித்து பேசிய பரூக் அப்துல்லா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலால் குண்டுவீசி தாக்கப்படும் காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட கதியையே நாமும் சந்திக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

    டவ்க்ட்ஜ்ல்

    பூஞ்ச் ​​பயங்கரவாத தாக்குதலின் விவரங்கள் 

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை(டிச.,21) ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    கடந்த ஒருமாத காலத்திற்குள் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களுள் இது 2வது-தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3:45 மணிக்கு தாத்யார் மோர் அருகே உள்ள ஒரு வளைவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வாகனங்கள் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    இந்த பூஞ்ச் ​​பயங்கரவாத தாக்குதலுக்கு, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி(PAFF) பொறுப்பேற்றது.

    இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து பேசிய பரூக் அப்துல்லா தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    ஜம்மு காஷ்மீர்

    வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி  மகாராஷ்டிரா
    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை உச்ச நீதிமன்றம்
    பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி  தீவிரவாதிகள்
    ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  நிலநடுக்கம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025