NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்
    பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் உடன் பத்திரிகையாளர் தீபா பாஸ்தி

    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 21, 2025
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்.

    இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட எழுத்தாளராகும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    எழுத்துலகில் இது ஒரு வரலாற்று சாதனையாகப் போற்றப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்த பானு முஷ்டாக், நீண்ட ஆண்டுகளாக கதைகள், நாவல்கள், மற்றும் சமூக பிரச்சனைகளை பிரதிபலிக்கும் இலக்கியங்களை எழுதி வருகின்றார்.

    'ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற கதைகளை அடிப்படையாக கொண்டு உருவான அவரது நாவல், ஆங்கிலத்தில் 'Heartlamp' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி மொழிபெயர்த்தார்.

    விவரங்கள்

    உலக இலக்கியவாதிகளிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

    இந்த நூல், தற்காலிக மனித உணர்வுகள், சமூக விரிசல்கள், மற்றும் பெண் வாழ்க்கையின் நுண்ணிய பண்புகளை எதிரொலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. வெளியானதும் இலக்கிய உலகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'The English Pen 2024' விருதையும் வென்றது.

    புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் பானு முஷ்டாக் உட்பட ஆறு பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இறுதியாக அவரின் 'Heartlamp' நாவல் தான் இவ்வாண்டு புக்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சாதனைக்காக பானு முஷ்டாக் ரூ.56 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றுள்ளார்.

    அவருக்கு இந்தியா முழுவதும் மற்றும் உலக இலக்கியவாதிகளிடமிருந்து வாழ்த்து மழை குவிந்துகொண்டிருக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Congratulations to acclaimed writer Smt #BanuMushtaq and translator Smt #DeepaBhasti for winning the #InternationalBooker2025 for #HeartLamp collection of stories. This is a rare feat for our sweet language, #Kannada. We are very proud of your achievement. Sirigannadam Gelge!… pic.twitter.com/nU2Lr4eqMq

    — KJ George (@thekjgeorge) May 21, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா

    சமீபத்திய

    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா

    கர்நாடகா

    50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா  இட ஒதுக்கீடு
    கர்நாடக அரசின் இடஒதுக்கீடு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் : நாஸ்காம் இட ஒதுக்கீடு
    கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனியார் வேலை ஒதுக்கீடு மசோதாவை இடைநிறுத்திய கர்நாடகா அரசு இட ஒதுக்கீடு
    கலைஞர்கள் நல நிதிக்காக கர்நாடக அரசு திரைப்பட டிக்கெட்டுகள், OTT சந்தாக்கள் மீது வரி விதிக்க திட்டம் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025