Page Loader
எஞ்சியிருந்த ஒரு நக்சலைட்டும் சரணடைந்தார்; நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக ஆனது கர்நாடகா
நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக ஆனது கர்நாடகா

எஞ்சியிருந்த ஒரு நக்சலைட்டும் சரணடைந்தார்; நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக ஆனது கர்நாடகா

எழுதியவர் Sekar Chinnappan
Feb 03, 2025
11:06 am

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் எஞ்சியிருந்த கடைசி நக்சலைட்டான லட்சுமி நிபந்தனையின்றி சரணடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகா அதிகாரப்பூர்வமாக நக்சல்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) உடுப்பி துணை ஆணையர் வித்யா குமாரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் கே.அருண் ஆகியோர் முன்பு சரணடைந்தார். உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் தாலுகாவில் உள்ள அமேசெபைல் மற்றும் சங்கரநாராயணா காவல் நிலையங்களில் லட்சுமி மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சரணடைந்தவுடன், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும் என்று அவர் கோரினார். லட்சுமியுடன் அவரது கணவர் சலீம், 2020ல் ஆந்திராவில் சரணடைந்த முன்னாள் நக்சலைட், மாநில நக்சல் சரணடைதல் கமிட்டி உறுப்பினர் ஸ்ரீபால் ஆகியோரும் வந்தனர்.

காரணம்

சரணடைந்ததற்கு காரணம்

மாநிலத்தின் சரண்டர் பேக்கேஜ் கொள்கையே தனது முடிவுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். மாநில அரசாங்கத்தின் கொள்கையின்படி, லட்சுமி ஒரு ஏ வகை நக்சலைட்டாக தகுதி பெறுகிறார், இதனால் அவர் ₹7 லட்சம் சரணடைதல் பேக்கேஜுக்கு தகுதி பெறுகிறார். கல்வி, மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதல் ஆதரவுடன், மூன்று ஆண்டுகளில் தொகுப்பு வழங்கப்படும் என்று துணை ஆணையர் வித்யா குமாரி விளக்கினார். சரணடைந்த நக்சலைட்டுகள் சமூகத்தில் மீண்டும் இணைவதற்கு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சரணடைதல் குழு பரிந்துரைத்துள்ளதாக ஸ்ரீபால் கூறினார். 2025இல் 22 நக்சலைட்டுகள் சரணடைந்ததை அவர் உறுதிப்படுத்தினார், இது கர்நாடகாவில் நக்சல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.