NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்
    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்

    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்

    எழுதியவர் Nivetha P
    Mar 03, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா.

    இவர் கர்நாடகாவில் உள்ள சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்(கேஎஸ்டிஎல்) தலைவராக உள்ளார்.

    இவர் மகனான பிரசாந்த் மதல் அரசு அதிகாரி ஆவார். பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்காளராக பணியாற்றியுள்ளார்.

    இந்நிலையில் மதல் விருபாக்சப்பா தலைவராக உள்ள சோப்பு நிறுவனத்தின் ரா மெட்டீரியல் டெண்டரினை குத்தகைதாரர் ஒருவர் எடுக்க முயன்றதாக தெரிகிறது.

    இதற்கு லஞ்சமாக 81 லட்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், குத்தகைதாரர் லஞ்சம் கொடுக்க விரும்பாததால் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளார். அந்த அதிகாரிகளின் வழிகாட்டல் படி, 40 லட்சத்தை அவர் வழங்கிய நிலையில், பாஜக எம்எல்ஏ மகன் பிரசாந்த் மதல் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

    ரூ.7.70 கோடி பறிமுதல்

    லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்ட கைது நடவடிக்கை

    அப்போது அங்கிருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்து, 40 லட்ச பணத்தினையும் பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து பிரசாந்த் மதல் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கணக்கில் வராத ரூ.1.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பெங்களூர் கிரிசென்ட் சாலையில் உள்ள மதல் விருபாக்சப்பாவின் அலுவலகத்திலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் ரூ.7.70 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கர்நாடக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரசாந்த் மதல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பாஜக
    மாநிலங்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கர்நாடகா

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் பெங்களூர்
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் காவல்துறை
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் தமிழ்நாடு

    பாஜக

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி இந்தியா
    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025