NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது
    இந்தியா

    கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது

    கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது
    எழுதியவர் Nivetha P
    Mar 20, 2023, 04:10 pm 1 நிமிட வாசிப்பு
    கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது
    கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது

    கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்டோ. இவர் பிலாங்காலை பகுதியில் உள்ள தேவயாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்தசில நாட்களாக இவர் பெண்களுடன் ஆபாசமாகயிருக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவிவந்துள்ளது. பாதிரியாரின் லீலைகள் என்னும் பெயரில் அந்த வீடியோக்கள், புகைப்படம், வாட்ஸ்-அப்'சாட்ஸ் ஆகியன பரவி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இவர் பணிபுரியும் தேவாலயங்களுக்கு வரும் பெண்களுக்கு ஆறுதல் கூறுவதுபோல் அவர்களை தொட்டு தடவிப்பேசி, அவர்களை மயக்கி, அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து அவர்களுக்கு பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். இதனிடையே ஆலந்தட்டுவிளையை சேர்ந்த பெண் இந்த பாதிரியார் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவருகிறார் என்றுகூறி அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாரளித்துள்ளார்.

    நாகர்கோவிலில் உள்ள பண்ணையார் வீட்டில் பதுங்கியிருந்த பாதிரியார்

    இவரைதொடர்ந்து நர்சிங் மாணவி ஒருவரும் பாதிரியார் மீது புகாரளித்துள்ளார். தன்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பாதிரியாருக்கு தகவல் கிடைத்தநிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். பாதிரியார் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவர்மீது பெண்களை இழிவுபடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் பிரிவு கூடுதல் எஸ்.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டதன் பேரில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாதிரியாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவர் கேரளா அல்லது பெங்களூரில் இருக்காமல் என தகவல்கள் கிடைத்தநிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணையினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று(மார்ச்.,20) நாகர்கோவிலில் உள்ள தனக்கு சொந்தமான பண்ணையார் வீட்டில் பதுங்கியிருந்த பாதிரியார் பெனடிக்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமூக வலைத்தளம்
    கன்னியாகுமாரி

    சமூக வலைத்தளம்

    தொடர்ந்து 'ரீல்ஸ்' பார்ப்பதால் ஏற்படும் மனநல பாதிப்பு.. புதிய ஆய்வு முடிவுகள்! ஃபேஸ்புக்
    உலகம் முழுவதும் 2 லட்சம் பேருக்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு! இன்ஸ்டாகிராம்
    ட்விட்டரைப் போலவே புதிய சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் இன்ஸ்டாகிராம்! ட்விட்டர்
    தன்னிச்சையாக அனுப்பப்பட்ட 'பிரெண்டு ரெக்வஸ்ட்'கள்.. பயனர்களிடம் மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக் நிறுவனம்! ஃபேஸ்புக்

    கன்னியாகுமாரி

    கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு தமிழக அரசு
    கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார் கேரளா
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள் மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023