NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

    எழுதியவர் Nivetha P
    Mar 22, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவி மலையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது இந்த பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    அதன்படி பட்டாசு ஆலையில் பணியாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.

    தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

    இதன் மூலம் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளரான சுதர்சனும்(31) பட்டாசு வெடித்து சிதறியதால் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேரில் ஆய்வு

    படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

    மேலும் இந்த வெடி விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தொடர்ந்து இந்த வெடி விபத்து குறித்த அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தினை ஆய்வு செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு

    தமிழ்நாடு

    திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு திமுக
    தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு அறநிலையத்துறை

    மாவட்ட செய்திகள்

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் கன்னியாகுமரி
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025