NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு
    கள்ளசாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டது pc: தி ஹிந்து

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 20, 2024
    08:03 am

    செய்தி முன்னோட்டம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முன்னதாக கள்ளச்சாராயம் குடித்ததால் பலருக்கும் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து நேற்று காலை முதல் 80க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    எனினும் அதில் பலர் மரணமடையவே விசாரித்ததில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்தது தெரியவந்தது.

    நேற்று இரவு வரை பலி எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில், இன்று காலை இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

    இதில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    விஷ சாராயம் குடித்து பலி

    #BREAKING | விஷச்சாராய விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

    சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் முடிந்தவுடன், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

    அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்

    காவல்துறை மற்றும் உளவுத்துறை டிஜிபி,… pic.twitter.com/wGUC032ufR

    — Thanthi TV (@ThanthiTV) June 20, 2024

    விசாரணை

    தமிழக அரசு நடவடிக்கை 

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர், கள்ளசாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதை கண்டறிந்தனர்.

    இதுவே விஷசாரயமாக மாற்றியுள்ளது.

    இந்த விஷச்சாராயத்தை காய்ச்சி விற்ற குற்றத்திற்காக கோவிந்தராஜ் என்பவரை காவல்துறையினர் செய்துள்ளனர்.

    அவர் இருப்பிலிருந்த மேலும் 200 லிட்டர் விஷ சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த விவகாரத்தில், கள்ளக்குறிச்சி ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரத்தில் இன்று தமிழக முதல்வர் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் ஆலோசனை செய்யவுள்ளார். அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025