NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்
    17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகாரளித்த 60 மாணவிகள்

    60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்

    எழுதியவர் Nivetha P
    Jan 18, 2023
    04:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது.

    இங்குள்ள விடுதியில் மாணவியருக்கு பழைய உணவு வழங்குவது, கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என சொல்வது, கடும் குளிர் என்றாலும் தரையில் படுக்க சொல்வது போன்ற குற்றச்சாட்டுகள் அங்குள்ள வார்டன் மீது கூறப்பட்டதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்திற்கு மேல் அதனை சகித்துக்கொள்ள முடியாத மாணவிகள் அந்த வார்டன் மீது புகார் அளிக்க முடிவு செய்ததாக தெரிகிறது.

    இதனையடுத்து பிளஸ் 1 படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென நேற்று முன்தினம் இரவு ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.

    உத்தரவு

    விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரி உறுதி

    ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த அவர்கள், தங்கள் விடுதியில் நடக்கும் கொடுமைகள் குறித்து துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கிய இவர்களது பயணம் நேற்று காலை 7மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் சென்றடைந்துள்ளது.

    அங்கிருந்த துணை ஆணையர் அனன்யா மிட்டலை சந்தித்த மாணவிகள் தங்கள் விடுதி வார்டன் மீது புகார் அளித்தனர்.

    இதனையடுத்து அவர் மாவட்ட கல்வி அதிகாரியை அழைத்து வார்டன் மீது உடனே உரியநடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

    இவரது உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர்(டிஸ்இ) அபய்குமார் ஷில் அங்கு உடனே வந்து மாணவிகளின் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

    பின்னர், அவர் உரிய விசாரணை மேற்கொண்டு வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, மாணவிகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா

    இந்தியா

    போலி செய்திகளை பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம்; மத்திய அரசு அதிரடி யூடியூப் வியூஸ்
    18,500 பொம்மைகள் பறிமுதல்: முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் ரெய்டு இந்தியா
    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு பள்ளி மாணவர்கள்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025