NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்
    இந்தியா

    60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்

    60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்
    எழுதியவர் Nivetha P
    Jan 18, 2023, 04:18 pm 1 நிமிட வாசிப்பு
    60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்
    17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகாரளித்த 60 மாணவிகள்

    ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்குள்ள விடுதியில் மாணவியருக்கு பழைய உணவு வழங்குவது, கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என சொல்வது, கடும் குளிர் என்றாலும் தரையில் படுக்க சொல்வது போன்ற குற்றச்சாட்டுகள் அங்குள்ள வார்டன் மீது கூறப்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அதனை சகித்துக்கொள்ள முடியாத மாணவிகள் அந்த வார்டன் மீது புகார் அளிக்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து பிளஸ் 1 படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென நேற்று முன்தினம் இரவு ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.

    விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரி உறுதி

    ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த அவர்கள், தங்கள் விடுதியில் நடக்கும் கொடுமைகள் குறித்து துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கிய இவர்களது பயணம் நேற்று காலை 7மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் சென்றடைந்துள்ளது. அங்கிருந்த துணை ஆணையர் அனன்யா மிட்டலை சந்தித்த மாணவிகள் தங்கள் விடுதி வார்டன் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து அவர் மாவட்ட கல்வி அதிகாரியை அழைத்து வார்டன் மீது உடனே உரியநடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவரது உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர்(டிஸ்இ) அபய்குமார் ஷில் அங்கு உடனே வந்து மாணவிகளின் குறைகளை கேட்டறிந்துள்ளார். பின்னர், அவர் உரிய விசாரணை மேற்கொண்டு வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, மாணவிகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! சுற்றுலா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி
    மார்ச் 22க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்

    இந்தியா

    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு விமானப்படை
    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி மோடி
    10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல் இந்தியா
    IQOO Z7 5G : புதிய அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! ஸ்மார்ட்போன்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023