NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி 
    கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி

    கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி 

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2023
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா-குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியினை சேர்ந்தவர் 42 வயதாகும் சிவராமக்கிருஷ்ணன்.

    தங்கம் தயாரிப்பு தொழிலாளியான இவரது மனைவி மாதவி(38), இத்தம்பதியருக்கு வைஷ்ணவி(16), லட்சுமி(13) மற்றும் குசுமபிரியா(9)என 3 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சிவராமக்கிருஷ்ணனின் தொழில் சரிவர இல்லை என்பதால் குடும்பச்செலவுகளுக்கு இவர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.

    அதற்கு வட்டி செலுத்த முடியாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடன் கொடுத்தோர் அடிக்கடி நேரில் வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில், சிவராமகிருஷ்ணன் தனது சொந்த ஊரைவிட்டு அனகாப்பள்ளி என்னும் பகுதியில் வாடகைவீடு ஒன்றிற்கு குடும்பத்தோடு சென்றுள்ளார்.

    ஆனால் அங்கும் கடன் கொடுத்தோர் தேடிவர துவங்கியுள்ளனர்.

    இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான சிவராமகிருஷ்ணன் தனது மனைவியிடம் நேற்றுமுன்தினம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    கொலை 

    வழக்குப்பதிவு செய்து விசாரணை துவக்கம் 

    அதற்கு அவரது மனைவி,'நாம் இறந்துவிட்டால் நமது மகள்கள் அனாதை ஆகிவிடுவார்கள்'என்றுக்கூறி சமாதானம் செய்துள்ளார்.

    அதனை ஏற்காத சிவராமகிருஷ்ணன் நேற்று(டிச.,28)விஷம் வாங்கிவந்து அதனை யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்துள்ளார்.

    விஷம் கலந்த உணவினை அனைவரும் சாப்பிடுவதை கண்டு கதறிய அவர், தானும் அந்த உணவை சாப்பிட்டுள்ளார்.

    அடுத்த சிலமணிநேரத்திலேயே அனைவரும் மயங்கி, கணவன்-மனைவி மற்றும் மகள்கள் வைஷ்ணவி(16),லட்சுமி(13) உள்ளிட்டோர் அடுத்தடுத்து படுக்கையிலேயே உயிரிழந்துள்ளனர்.

    இதனை கண்டு அதிர்ந்த குசுமபிரியா, அலறியுள்ளார்.

    அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குசுமபிரியாவை மீட்டு அனகாபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.

    தகவலறிந்து அங்குவந்த காவல்துறை சம்பவயிடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனை மேற்கொள்ள அனுப்பியுள்ளனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடன்
    ஆந்திரா
    அரசு மருத்துவமனை
    தற்கொலை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்

    ஆந்திரா

    சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்  அமலாக்க இயக்குநரகம்
    ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சிஐடி
    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு கைது
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் ஜெகன் மோகன் ரெட்டி

    அரசு மருத்துவமனை

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்  கோவை
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்  தமிழ்நாடு
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்  தமிழ்நாடு

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025