NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல்
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல்

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல்

    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023
    05:55 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் உள்ள பெரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீப காலமாக தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.

    மாணவர் சங்கங்களுக்கிடையே ஏற்படும் மோதல் அதிகமாகி கொண்டே போகிறது.

    இடதுசாரி மாணவ அமைப்பிற்கும், வலதுசாரி ஏபிவிபி அமைப்பிற்கும் இடையேயான கருத்து மோதல்கள் போராட்டத்தில் ஆரம்பித்து, தற்போது வன்முறையில் வந்து நிற்கிறது.

    இது கல்வியாளர்கள் மத்தியில் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து ஜேஎன்யூ மாணவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிமுறைகள் என்று கூறி 10 உத்தரவுகளை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

    அதில், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினால் ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

    பல்கலைக்கழக நிர்வாகம்

    ஹாஸ்டல் அறைகளில் தவறான சொற்களை எழுதுவதும் குற்றமே

    வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது போன்ற அதிரடியான உத்தரவுகள் அதில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் ஹாஸ்டல் அறைகளில் தவறான, அவமானத்திற்குரிய சொற்களை எழுதுவது, வரைவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் தவறு, அதற்கும் தண்டனை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த ஒழுங்கு விதிமுறையானது கடந்த பிப்ரவரி 3ம் தேதியில் இருந்தே அமலுக்கு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக குஜராத் கலவரம் குறித்த பிபிசி டாக்குமெண்டரி ஒலிபரப்புவது தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

    அத்துடன் சத்திரபதி சிவாஜி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாகவும் மோதல் ஏற்பட்டு, அதில் தமிழக மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - என்னென்ன பலன்கள் ஜியோ
    நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது டெல்லி
    உண்மையான சம்பளத்தை கூறிய ​CRED CEO குணால் ஷா! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025