NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு

    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு

    எழுதியவர் Nivetha P
    Apr 06, 2023
    08:35 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று(ஏப்ரல்.6) காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்க புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 600 காளைகள் அழைத்து வரப்பட்டது.

    அந்த காளைகளை பிடிக்க 225 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இந்த போட்டியினை ஆர்ஓடி குழந்தைசாமி துவக்கி வைத்துள்ளார்.

    ஊர்ஜவுளி எடுத்துவரப்பட்டு பாரம்பரிய முறைப்படி முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

    அதன் பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.

    வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்க களமிறங்கி முயற்சி செய்தனர்.

    அதனை அங்கு கூடியிருந்த மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    அமைச்சரின் காளைகள் வெற்றிபெற்றது

    வெற்றி பெற்றோருக்கு வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள்

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் வீரர்களால் பிடிக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி காசு, பீரோ, கட்டில், டிவி, மின்விசிறி, மிக்சி போன்ற பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதே போல்புதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாம்பட்டியில் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவிலும் இன்று(ஏப்ரல்.,6) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    இதில் 650 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து நேற்று(ஏப்ரல்.,5) புதுக்கோட்டை இலுப்பூரில் இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு

    மாவட்ட செய்திகள்

    தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு தமிழ்நாடு செய்தி
    வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம் தமிழ்நாடு
    தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர் தமிழ்நாடு
    தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்யும் ஆவின் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025