NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவுக்கு எதுக்கு? சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவுக்கு எதுக்கு? சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர் 
    சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர்

    அமெரிக்காவுக்கு எதுக்கு? சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர் 

    எழுதியவர் Sekar Chinnappan
    May 26, 2025
    05:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்திய எல்லை தாண்டிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது என்ற கூற்றுகளை நிராகரித்து, பாகிஸ்தானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்ததற்காக இந்திய ஆயுதப் படைகளை வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.

    ஜெர்மன் நாளிதழான ஃபிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் ஜெய்துங்கிற்கு அளித்த பேட்டியில், டாக்டர் ஜெய்சங்கர், இந்திய ராணுவ நடவடிக்கைதான் பாகிஸ்தானை தாக்குதலை நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று சொல்ல வைத்தது என்று கூறினார்.

    ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா மே 7 அன்று பதிலடி கொடுத்த நிலையில், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது.

    ஆனால், அதை முறியடித்து, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் வலுவான பதிலடிகளைக் கொடுத்தது.

    அமைதி

    அமைதியை நிலைநாட்ட இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த பாகிஸ்தான்

    ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு நடந்த இந்த பதிலடியால் பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்து போனது.

    இதையடுத்து, இதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது எனும் சூழலில், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனெரல், இந்தியாவின் டிஜிஎம்வோவிடம் பேசி தாக்குதலை நிறுத்திக் கொள்ள கோரிக்கை வைத்திட்டார்.

    அதை ஏற்று இந்திய ராணுவமும் தாக்குதலை நிறுத்திய நிலையில், பாகிஸ்தான் அமெரிக்காவுக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் பகிரங்கமாக நன்றி தெரிவித்தது. எனினும், இந்திய தரப்பில் அமெரிக்கா வெறுமனே கவலையை வெளிப்படுத்தியதாகவே கூறுகிறது.

    "பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விரும்பினால், அவர்களின் ஜெனரல் எங்களுடன் நேரடியாகப் பேச வேண்டும் என்று அமெரிக்கா உட்பட அனைவருக்கும் நாங்கள் தெளிவுபடுத்தினோம். அதுதான் நடந்தது." என்று ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்தால் காஷ்மீருக்கு வளர்ச்சி; காங்கிரசின் சல்மான் குர்ஷித் கருத்து காங்கிரஸ்
    சாதனா பிராட்காஸ்ட்  பங்கு மோசடியில் தொடர்புடைய பாலிவுட் நடிகர் உள்ளிட்ட 59 பேருக்கு தடை விதித்தது செபி செபி
    நகைக் கடன் புதிய விதிகளை தளர்த்துமாறு ஆர்பிஐக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுரை கடன்
    இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது ராஜஸ்தான்

    எஸ்.ஜெய்சங்கர்

    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கத்தார்
    'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இஸ்ரேல்
    நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்  இந்தியா

    இந்தியா

    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்
    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! ஜம்மு காஷ்மீர்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா

    ஆபரேஷன் சிந்தூர்

    ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்திய ராணுவம்
    பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென போன் போட்ட பிரேசில் அதிபர்; ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டு பிரேசில்
    ஆபரேஷன் சிந்தூரால் நாடாளுமன்றத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் எம்பி; வைரலாகும் வீடியோ பாகிஸ்தான்
    உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான்  பாகிஸ்தான்

    இந்திய ராணுவம்

    பாகிஸ்தான் எல்லையை நோக்கி ராணுவ வீரர்களை முன்னோக்கி நகர்த்த தொடங்கியதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    போர் மூண்டால் எப்படி அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவிக்கும்? கடந்த கால வரலாறும், தற்போதைய சூழலும் போர்
    தாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன? இந்தியா
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025