NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: ஆந்திர முதல்வர்

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 17, 2023
    05:38 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று(மார் 17) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நிலுவையில் உள்ள நிதிகள், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் போன்ற ஆந்திர மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

    ஆந்திரப் பிரதேசம் பிரிந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையேயான பல இருதரப்புப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்று முதல்வர் ஜெகன் ரெட்டி கூறினார்.

    அதனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் அந்த மாநிலம் தன்னிறைவை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், போலவரம் திட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசிய அவர், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கோரினார்.

    இந்தியா

    ஆந்திர மாநில வளர்ச்சிக்கான நிதிகளை கோரினார்

    போலவரம் திட்டத்திற்காக தனது மாநிலம் ஏற்கனவே சுமார் 2,900 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், அதை மத்திய அரசு இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

    திட்டத்தை விரைந்து முடிக்க, தற்காலிக முறையில் ரூ.10,000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அவர் கேட்டு கொண்டார்.

    55,548.87 கோடி மதிப்பிலான போலவரம் திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

    இது தவிர, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் விவாதித்ததாகவும், மேலும் 12 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    இந்தியா
    மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு மாநிலங்கள்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் மாநில அரசு
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    இந்தியா

    வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல் மும்பை
    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை காங்கிரஸ்
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு தமிழ்நாடு
    குடும்பங்களுக்காக ஜியோவின் Jio Plus திட்டம் அறிமுகம்! சலுகைகள் என்ன? ஜியோ

    மோடி

    JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு இந்தியா
    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது நரேந்திர மோடி
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025