NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்திரயான்-3 ஏவுகணையின் பின்னணியில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3 ஏவுகணையின் பின்னணியில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்
    முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் உயிரிழந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி

    சந்திரயான்-3 ஏவுகணையின் பின்னணியில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 04, 2023
    09:28 am

    செய்தி முன்னோட்டம்

    ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன்களுக்கு குரல் கொடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன(இஸ்ரோ) விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    அவர் கடைசியாக சந்திரயான் 3 ஏவுகணையின் கவுண்ட்டவுனுக்கு குரல் கொடுத்தார்.

    சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3யை தரையிறக்கியதன் மூலம், நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டிருக்கும் விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்துருவப் பகுதியின் மேற்பரப்பில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தன.

    பிளக்ன்வெ

    14 நாட்கள் கழித்து மீண்டும் இயங்குமா சந்திரயான்-3 கருவிகள்?

    தற்போது, லேண்டரும், ரோவரும் தூங்க வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 14 நாட்களில் அது மீண்டும் இயக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவில் ஒரு இரவு கழிவது என்பது பூமியின் நேரப்படி 14-நாட்களாகும். நிலவில் இரவு நேரங்களில் அதிக குளிர் அடிக்கும் என்பதாலும் சூரிய ஒளி இல்லாமல் ஆராய்ச்சி நடத்த முடியாது என்பதாலும் லேண்டரும், ரோவரும் தூங்க வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், இந்தக் கடும் குளிரில் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் பழுதடைவற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

    எனவே, இன்னும் 14 நாட்கள் கழித்து அந்த கருவிகளால் இயங்க முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தாலும், இஸ்ரோ விஞ்ஞானிகள் அது மீண்டும் இயக்கப்படும் என்றும் அப்படி இயக்கப்படாவிட்டாலும் அது இந்தியாவின் தூதராக நிலவில் என்றென்றும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சந்திரயான் 3

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    இஸ்ரோ

    இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? சந்திரயான்
    சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை சந்திரயான் 3
    புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி? சந்திரயான் 3
    'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல் தமிழ்நாடு

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 தரையிறக்கம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்; வலுக்கும் கண்டனங்கள்  பிரகாஷ் ராஜ்
    F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம் எலக்ட்ரிக் பைக்
    சந்திரயான் 3: தரையிறக்கத்தை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பு! இஸ்ரோ
    சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்? சந்திரன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025