LOADING...
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?
அடுத்த நான்கு நாட்களுக்கு (அக்டோபர் 12 வரை) கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2025
08:38 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு (அக்டோபர் 12 வரை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 14 செ.மீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் 9 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை

கனமழைக்கு வாய்ப்புள்ள முக்கிய மாவட்டங்கள்

நாளை, அக்டோபர் 8, கோவை (மலைப் பகுதிகள்), நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 9, மற்றும் அக்டோபர் 10 ஆகிய நாட்களில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.