NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது
    இந்தியா

    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது

    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது
    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023, 12:19 pm 1 நிமிட வாசிப்பு
    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது
    அனைத்து குற்றப்பத்திரிகைகளும் கடந்த 15 நாட்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக NIA தெரிவித்துள்ளது.

    2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர சதி செய்ததாக 75 க்கும் மேற்பட்டவர்கள் மீது நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் PFIஐ சேர்ந்த 58 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பை சேர்நத இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்ட, PFI தலைவர்கள்/பணியாளர்கள் மீது செப்டம்பர் 2022 இல் பதிவு செய்யப்பட்டதாகும்.

    கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் PFI இயக்கத்தினர் அதிகம் பேர் உள்ளனர்

    இரண்டாவது குற்றப்பத்திரிகை ஐந்து பேருக்கு எதிராக, 2022 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 2022 இல் தெலுங்கானா காவல்துறையிடம் இருந்து விசாரணையை எடுத்துக் கொண்ட NIA, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. PFI இயக்கத்தினர் அதிகம் உள்ள கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று(மார் 17) மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற இறுதி நோக்கத்துடன் செயல்பட்டு, இதற்கான நிதி திரட்டலில் ஈடுபட்டதால் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    கேரளா

    சமீபத்திய

    வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு தமிழ்நாடு
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ கால்பந்து
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்

    தமிழ்நாடு

    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை கடலூர்
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்

    இந்தியா

    ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்! ஜியோ
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா உலக வங்கி
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை

    கேரளா

    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல் கொரோனா
    கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி இந்தியா
    கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார் கன்னியாகுமாரி
    வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023