NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெபாசிட் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள்.. அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெபாசிட் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள்.. அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!
    டெபாசிட் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள்

    டெபாசிட் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள்.. அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 12, 2023
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    ரிசர்வ் வங்கி கடந்த மாதம் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

    2016-ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட குழப்பத்தைப் போல தற்போதும் மக்களிடம் பணத்தை மாற்றுவதற்கு முன் நிலையிலாத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பெரும் கூச்சல் குழப்பமின்றி, 2000 ரூபாய் நோட்டை மாற்றும் செயல்முறை எளிதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    ரூபாய் நோட்டுக்களை மாற்ற 4 மாத காலம் அவகாசம் கொடுத்திருந்த போதிலும், கடந்த 20 நாட்களிலேயே 50% நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    இன்னும் சொல்லப் போனால், மக்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதை விட, 85% மக்கள் அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து விட்டே செல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    இந்தியா

    அதிகரிக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: 

    2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றும் செயல்முறை எளிதாக நடைபெறுவதற்கு இந்திய மக்களிடையே அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின் கட்டணம் தொடங்கி, ரயில் கட்டம் வரை பெரும்பாலான இடங்களில் டிஜிட்டலாகவே கட்டணம் செலுத்த முடிகிற நிலையில், ரூபாய் நோட்டுக்களின் தேவை மக்களிடம் குறைந்திருக்கிறது.

    கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் யுபிஐ மூலம் 9.41 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஏப்ரலை விட 6%-மும், கடந்தாண்டு மே மாதத்தை விட 58%-மும் அதிகம்.

    உலகிலேயே நிகழ் நேரத்தில் அதிக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. மேலும், உலகின் பல நாடுகள் யுபிஐ தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: கொல்கத்தா பதிப்பு!  உணவு குறிப்புகள்
    ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்! துப்பாக்கிச் சுடுதல்
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  கர்நாடகா
    ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை!  சிவகங்கை

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025