NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்
    தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்

    தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்

    எழுதியவர் Nivetha P
    Mar 12, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள் என்னும் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள், கல்லூரி படிப்பினை முடித்து வெளியே வருபவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக தங்கள் விவரங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதனை அவர்கள் தொடர்ந்து புதுப்பித்தும் வருகிறார்கள்.

    அதன்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.

    இந்த 3 ஆண்டுகள் முடிவடையும் தேதியினை தவற விடும் நபர்களுக்கு 2 மாதங்கள் சலுகை காலமும் வழங்கப்பட்டு வருகிறது.

    போட்டி தேர்வுகள்

    மொத்தம் 67,55,466 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தகவல்

    இந்நிலையில் இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

    அதன் படி, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் , மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர் என மொத்தம் 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 நபர்கள் பதிவு செய்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள் என்று வேலை வாய்ப்பு மற்றும் பதிவு துறை அறிவித்துள்ளது.

    தற்போது பெரும்பாலான அரசு பணிகள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் இந்தியா
    வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8 வானிலை அறிக்கை
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் நாகர்கோவில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025