NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம்
    5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம்

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம்

    எழுதியவர் Nivetha P
    Aug 08, 2023
    04:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் நாடுத்தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 12 வகையான தடுப்பூசி மூலம் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த தடுப்பூசி தவணைகளை போட தவறியவர்களுக்காக கடந்த 2014ம்ஆண்டு முதல் இந்திர தனுஷ் 5.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் இத்திட்டம் நடப்பாண்டில் 3 சுற்றுகளாக நடக்கவுள்ளது என்று இதனை சென்னையில் துவக்கி வைத்த மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தின் படி, விடுபட்ட மற்றும் தடுப்பூசி போட தவறிய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

    தடுப்பூசி 

    முதல் சுற்று இம்மாதம் நடக்கும் நிலையில், அடுத்த சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்கவுள்ளது

    அதனை தொடர்ந்து அவர், "இதன் முதல்சுற்று ஆகஸ்ட் 7ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கவுள்ளது, 2ம் சுற்று செப்டம்பர் 11 முதல் 16 வரையும், 3ம் சுற்று அக்டோபர் 9 முதல் 14 வரையும் நடைபெறும்" என்றும் தெரிவித்தார்.

    இந்த திட்டத்தில் தட்டம்மை, நிமோனியா, FIPV-3ன் 3வது தவணை ஊசி, ரூபெல்லா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இது குறித்த தெளிவான விவரங்களை யு-வின் என்னும் இந்திய அரசின் கணினி மென்பொருள் கொண்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மருத்துவத்துறை

    சமீபத்திய

    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி

    இந்தியா

    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட் மத்திய அரசு
    இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள்  உலகம்
    மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி  மத்திய பிரதேசம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    மருத்துவத்துறை

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  மத்திய அரசு
    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மு.க ஸ்டாலின்
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025