LOADING...
ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! இனி 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ஒரு பைசா கூட கிடைக்காது
டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது கிடைக்கும் ரீஃபண்ட் தொகையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! இனி 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ஒரு பைசா கூட கிடைக்காது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2026
05:54 pm

செய்தி முன்னோட்டம்

ரயில்வே செயல்பாடுகளை மேம்படுத்தவும், டிக்கெட் முன்பதிவில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் ஐந்து முக்கிய சீர்திருத்தங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். புதிய விதிகளின்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது கிடைக்கும் ரீஃபண்ட் (Refund) தொகையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து (Freight movement) மற்றும் ரயில்வே கட்டுமானப் பணிகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகளையும் அமைச்சர் இந்தச் சந்திப்பில் வெளியிட்டார். ரயில்வே இந்த மாற்றங்களை ஏப்ரல் 1 முதல் 15 ஆம் தேதிக்குள் கட்டம் கட்டமாக செயல்படுத்தும் என செய்திகள் கூறுகின்றன.

ரத்து விதிகள்

புதிய டிக்கெட் ரத்து விதிகள்

புதிய விதிகளின்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது கிடைக்கும் ரீஃபண்ட் (Refund) தொகையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 72 மணி நேரத்திற்கு மேல்: டிக்கெட் விலையில் மிகக் குறைந்த அளவிலான 'பிளாட்' கட்டணம் மட்டுமே கழிக்கப்படும். 72 முதல் 24 மணி நேரத்திற்குள்: டிக்கெட் விலையில் 25% கட்டணம் கழிக்கப்படும். 24 முதல் 8 மணி நேரத்திற்குள்: டிக்கெட் விலையில் 50% கட்டணம் கழிக்கப்படும். 8 மணி நேரத்திற்கு குறைவாக: டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் ரீஃபண்ட் கிடையாது. "புரோக்கர்கள் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்து பணத்தைப் திரும்பப் பெறுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மாற்றம்

பயணிகளுக்கு இதோ ஒரு நல்ல செய்தி

கடுமையான ரத்து விதிகளுக்கு மத்தியிலும், பயணிகளுக்கு வசதியாக ஒரு புதிய மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இனி பயணிகள் தங்களது போர்டிங் பாயிண்ட் எனப்படும் ஏறும் நிலையத்தை, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முன்பு சார்ட் தயாரிப்பதற்கு முன்பே இதைச் செய்ய வேண்டியிருந்தது. தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்க, இனி ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement