NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள்
    இந்தியா

    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள்

    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2023, 12:32 pm 0 நிமிட வாசிப்பு
    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள்
    இவர்களின் மூன்று வயது மகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெர்மன் அதிகாரிகளின் காவலில் இருக்கிறார்

    ஜெர்மன் குழந்தை உரிமைகள் காப்பகத்தில் இருந்து தங்கள் குழந்தையை மீட்டு தருமாறு குழந்தையின் பெற்றோர் இந்திய அதிகாரிகளை அணுகியுள்ளனர். அந்த பெற்றோரின் மூன்று வயது மகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெர்மன் அதிகாரிகளின் காவலில் இருக்கிறார். "செப்டம்பர் 2021இல், எங்கள் மகள் ஜெர்மன் குழந்தை சேவைகளால் அழைத்துச் செல்லப்பட்டார். தற்செயலாக அவளது அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டது. நாங்கள் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் எங்களை திருப்பி அனுப்பினர். ஆனால் மருத்துவர்கள், குழந்தை சேவைகளை அழைத்து, என் மகளின் காவலை அவர்களுக்கு வழங்கினர். அவளுடைய காயத்தின் தன்மை காரணமாக, அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தை சந்தேகிக்கிறார்கள் என்பதை நாங்கள் பின்னர் அறிந்தோம்." என்று குழைந்தையின் தாய் கூறியுள்ளார்.

    பிரதமர் மோடியிடம் வேண்டுகோள்

    "தெளிவுபடுத்தும் ஆர்வத்தில், நாங்கள் எங்கள் டிஎன்ஏ மாதிரிகளைக் கூட கொடுத்தோம். டிஎன்ஏ சோதனை, போலீஸ் விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்குப் பிறகு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு பிப்ரவரி 2022இல் முடிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 2021இல், அதே மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த சந்தேகத்தை நிராகரித்தார்." என்று மேலும் அவர் கூறியுள்ளார். அதன் பிறகும் பல மாதங்களாக ஜெர்மன் அதிகாரிகள் குழந்தையின் நலனுக்காக என்று கூறி குழந்தையை இன்னும் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் இருக்கின்றனர். "எங்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்காததால், குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வர விரும்புகிறோம். குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வர உதவுமாறு பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொள்கிறோம்." என்று அந்த பெற்றோர் கூறியுள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    இந்தியா

    உலகம்

    மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங் உலக செய்திகள்
    170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன உலக செய்திகள்
    நித்யானந்தாவின் கைலாசா: உலகில் வேறு என்னென்ன குறு நாடுகள் உள்ளன உலக செய்திகள்
    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு தமிழ்நாடு

    இந்தியா

    சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன் சேமிப்பு திட்டங்கள்
    தங்கம் விலை அதிரடியாக உயர்வு - இன்றைய நாளின் விலை பட்டியல் தங்கம் வெள்ளி விலை
    CISF உயர்வு தினம் 2023: மார்ச் 12ஆம் தேதி கொண்டாட்டம் இந்தியா
    கேலோ இந்தியா தஸ் கா டம் போட்டியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்திய அணி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023