NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள்
    இவர்களின் மூன்று வயது மகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெர்மன் அதிகாரிகளின் காவலில் இருக்கிறார்

    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2023
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜெர்மன் குழந்தை உரிமைகள் காப்பகத்தில் இருந்து தங்கள் குழந்தையை மீட்டு தருமாறு குழந்தையின் பெற்றோர் இந்திய அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

    அந்த பெற்றோரின் மூன்று வயது மகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெர்மன் அதிகாரிகளின் காவலில் இருக்கிறார்.

    "செப்டம்பர் 2021இல், எங்கள் மகள் ஜெர்மன் குழந்தை சேவைகளால் அழைத்துச் செல்லப்பட்டார். தற்செயலாக அவளது அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டது. நாங்கள் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் எங்களை திருப்பி அனுப்பினர். ஆனால் மருத்துவர்கள், குழந்தை சேவைகளை அழைத்து, என் மகளின் காவலை அவர்களுக்கு வழங்கினர். அவளுடைய காயத்தின் தன்மை காரணமாக, அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தை சந்தேகிக்கிறார்கள் என்பதை நாங்கள் பின்னர் அறிந்தோம்." என்று குழைந்தையின் தாய் கூறியுள்ளார்.

    இந்தியா

    பிரதமர் மோடியிடம் வேண்டுகோள்

    "தெளிவுபடுத்தும் ஆர்வத்தில், நாங்கள் எங்கள் டிஎன்ஏ மாதிரிகளைக் கூட கொடுத்தோம். டிஎன்ஏ சோதனை, போலீஸ் விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்குப் பிறகு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு பிப்ரவரி 2022இல் முடிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 2021இல், அதே மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த சந்தேகத்தை நிராகரித்தார்." என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

    அதன் பிறகும் பல மாதங்களாக ஜெர்மன் அதிகாரிகள் குழந்தையின் நலனுக்காக என்று கூறி குழந்தையை இன்னும் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் இருக்கின்றனர்.

    "எங்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்காததால், குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வர விரும்புகிறோம். குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வர உதவுமாறு பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொள்கிறோம்." என்று அந்த பெற்றோர் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    இந்தியா

    மகளிர் தினத்தில் சிறந்த கிஃப்ட்-டை கொடுக்க வேண்டுமா? சிறந்த கேட்ஜெட்ஸ் இங்கே! தொழில்நுட்பம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் பண்டிகை
    ஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி மத்திய அரசு
    ஓசேன்ஸ் செவன் சவாலை முறியடித்த மிக இளம் வயது வீரர் : இந்தியாவின் பிரபாத் கோலி சாதனை இந்திய அணி

    உலகம்

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம் பாகிஸ்தான்
    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான் ஈரான்
    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கொரோனா
    உலகளவில் இரண்டு மாதங்களில் 1.2 லட்சம் பேர் பணிநீக்கம் - பின்னணி என்ன? ஆட்குறைப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025