NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள்; கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள்; கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம்
    கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம்

    அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள்; கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 02, 2024
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடா மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டத்தில் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அன்று இந்தியாவுக்கான கனேடிய உயர் ஆணையரகத்தின் பிரதிநிதிக்கு சம்மன் அனுப்பியது.

    அக்டோபர் 29 அன்று கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவிடம் மோரிசன் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டி, தி வாஷிங்டன் போஸ்ட் மூலம் இந்தக் கருத்துக்கள் முதலில் தெரிவிக்கப்பட்டன.

    இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை அபத்தமானது மற்றும் ஆதாரமற்றது என்று அவர்களிடம் கண்டனம் செய்தது.

    அதிருப்தி

    கனடாவின் நடவடிக்கையால் அதிருப்தி

    கனடா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் கடும் அதிருப்தியை இந்தியா வெளிப்படுத்தியது. கனேடியப் பிரதிநிதிக்கு இதுகுறித்து முறையான இராஜதந்திரக் குறிப்பு வெளியிடப்பட்டது.

    இந்தியாவின் தலைமை மீதான ஆதாரமற்ற தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதுகுறித்து பேசிய இந்தியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், இந்த குற்றச்சாட்டுகள் இந்தியாவை இழிவுபடுத்துவதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகத் தோன்றுகின்றன என்று கூறினார்.

    கனடாவின் தற்போதைய நிர்வாகத்தில் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலை சுட்டிக்காட்டினார். கூடுதலாக, கனேடிய அதிகாரிகளால் இந்திய தூதர்கள் கண்காணிக்கப்படுவது குறித்தும் வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்தது.

    இத்தகைய நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளை சீர்குலைக்கும் என்று எச்சரித்ததோடு, கனடாவை சர்வதேச இராஜதந்திர விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    அமித்ஷா
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்  இந்தியா
    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ சீனா
    கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை உலகம்
    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது  இந்தியா

    இந்தியா

    ஏஐ மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை விரைவில் நடைமுறைக்கு வரும்; அமைச்சர் நிதின் கட்கரி தகவல் நிதின் கட்கரி
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவு ஆர்பிஐ
    ரயில் விபத்துகளில் நாசவேலைக்கு தொடர்பில்லை? என்ஐஏவின் முதற்கட்ட விசாரணையில் தகவல் ரயில்கள்
    இனி வெளிநாடு வாழ் இந்தியர்களும் புக் செய்யலாம்; ஸ்விக்கியின் அசத்தல் அறிவிப்பு ஸ்விக்கி

    அமித்ஷா

    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர்

    வெளியுறவுத்துறை

    'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இஸ்ரேல்
    நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்  இந்தியா
    இந்தியா-அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம் இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025