NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!
    அக்னி 5 ஏவுகணை சோதனை (படம்: News 18 Tamilnadu)

    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2022
    11:15 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய-சீன எல்லையில் பதட்டம் குறையாத நிலையில், அக்னி 5 ஏவுகணை சோதனையை நேற்று இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

    இந்த ஏவுகணை 1500 கிலோ அணு ஆயுதங்களைத் சுமந்து செல்லும் ஒரு போர் ஆயுதமாகும்.

    இதற்கு ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் வரைப் பாயும் சக்தி இருக்கிறது.

    இது மணிக்கு 29,401 கிமீ வேகத்தில் செல்ல கூடிய திறன் கொண்டது. ஒரு நொடிக்கு 8.16 கிமீ வேகத்தில் இது பயணம் செய்யும்.

    நேற்று, 5,500கிமீ தொலைவில் இருந்த இலக்கை மிக சரியாக தாக்கிய இந்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே களமிறக்கப்பட்ட அக்னி 1-4 வரை உள்ள ஏவுகணைகளால் 3000கிமீ வரை மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எல்லை

    இந்திய-சீன பிரச்சனை!

    கடந்த 9 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் என்ற பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்.

    இதைப் பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

    அத்துமீறி நுழைந்த 400 பேரை இந்திய வீரர்கள் 50 பேர் சேர்ந்து விரட்டி அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று நாடெங்கும் பரவலாகப் பேசப்பட்டது.

    இந்நிலையில், அக்னி 5 ஏவுகணையைக் களமிறக்கி உலக நாடுகளை இந்தியா நடுநடுங்க வைத்திருக்கிறது.

    5,500 கிமீ ரேடியஸ் அதாவது உலகில் உள்ள பாதி நாடுகள் வரை பாயும் திறன் இந்த ஏவுகணைக்கு உண்டு.

    இதுவரை, அமெரிக்கா, சீனா, ரஷியா, வடகொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த அளவு சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல் முடிவு
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! தொழில்நுட்பம்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025