NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!
    இந்தியா

    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!

    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2022, 11:15 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!
    அக்னி 5 ஏவுகணை சோதனை (படம்: News 18 Tamilnadu)

    இந்திய-சீன எல்லையில் பதட்டம் குறையாத நிலையில், அக்னி 5 ஏவுகணை சோதனையை நேற்று இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த ஏவுகணை 1500 கிலோ அணு ஆயுதங்களைத் சுமந்து செல்லும் ஒரு போர் ஆயுதமாகும். இதற்கு ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் வரைப் பாயும் சக்தி இருக்கிறது. இது மணிக்கு 29,401 கிமீ வேகத்தில் செல்ல கூடிய திறன் கொண்டது. ஒரு நொடிக்கு 8.16 கிமீ வேகத்தில் இது பயணம் செய்யும். நேற்று, 5,500கிமீ தொலைவில் இருந்த இலக்கை மிக சரியாக தாக்கிய இந்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே களமிறக்கப்பட்ட அக்னி 1-4 வரை உள்ள ஏவுகணைகளால் 3000கிமீ வரை மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய-சீன பிரச்சனை!

    கடந்த 9 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் என்ற பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். இதைப் பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். அத்துமீறி நுழைந்த 400 பேரை இந்திய வீரர்கள் 50 பேர் சேர்ந்து விரட்டி அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று நாடெங்கும் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், அக்னி 5 ஏவுகணையைக் களமிறக்கி உலக நாடுகளை இந்தியா நடுநடுங்க வைத்திருக்கிறது. 5,500 கிமீ ரேடியஸ் அதாவது உலகில் உள்ள பாதி நாடுகள் வரை பாயும் திறன் இந்த ஏவுகணைக்கு உண்டு. இதுவரை, அமெரிக்கா, சீனா, ரஷியா, வடகொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த அளவு சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருந்தன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சீனா
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    சீனா

    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா

    இந்தியா

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023