NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம்

    இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 06, 2024
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி முதன்முதலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்திய தனியார் நிறுவனமான லார்சன் & டூப்ரோ(L&T), பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புடன்(DRDO) இணைந்து இந்த பீரங்கியை உருவாக்கியுள்ளது.

    அனுமதி கிடைத்த 24 மாதங்களுக்குள் இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவின் அதிவேக தயாரிப்பு என்ற பெயர் இதற்கு கிடைத்துள்ளது.

    ஆரம்ப சோதனைகளைத் தொடர்ந்து, 'ஜோராவார்," இல் சில மேம்படுத்தல்கள் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

    அடுத்தபடியாக, இது இராணுவத்தின் உதவியுடன் பாலைவனத்தில் சோதனை செய்யப்பட உள்ளது. அதற்கு பிறகு, லடாக்கில் உள்ள உயரமான இடங்களில் வைத்தும் இது சோதனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியா 

    350 டாங்கிகளை வாங்க திட்டமிடும் இந்திய இராணுவம் 

    'ஜோராவார்' பீரங்கியானது இந்திய ராணுவத்தின் திட்டமான ஜோராவார் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

    இது போர்க்களங்களில் உயரமான பகுதிகளில் விரைவாகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்ட்டுள்ளது.

    மேலும், உள்நாட்டிலேயே இந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி செய்லபடுத்தும் இராணுவ முயற்சியாகவும் இது கருத்தாடுகிறது.

    இதற்கிடையில், ஏறத்தாழ 350 லைட் டாங்கிகளை(ஒவ்வொன்றும் அதிகபட்சம் 25 டன் எடையுள்ளவைகள்) ஒரு கட்டமாக வாங்குவதற்கு இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம் கிட்டத்தட்ட ஆறு படைப்பிரிவுகளை உருவாக்குவது இராணுவத்தின் திட்டமாகும்.

    இந்த பீரங்கிகள் செயற்கை நுண்ணறிவு (AI), தந்திரோபாய கண்காணிப்பு ட்ரோன்கள், அலைந்து திரியும் வெடிமருந்துகள் மற்றும் செயலில் உள்ள பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

    இந்தியா

    யுஜிசி-நெட் மறுதேர்வுக்கான பெரிய மாற்றத்தை அறிவித்தது என்டிஏ  யுஜிசி
    டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு  டெல்லி
    லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி லடாக்
    பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது குஜராத்

    இந்திய ராணுவம்

    கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது? இந்தியா
    ராணுவம் To பாரா விளையாட்டு; கண்ணிவெடியில் காலை இழந்த ராணுவ வீரரின் சக்ஸஸ் ஸ்டோரி ஆசிய விளையாட்டுப் போட்டி
    அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு கிடைத்த பெருமிதம்; இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்க வாய்ப்பு நடிகர் அஜித்
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025