NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம் 
    இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம்

    இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம் 

    எழுதியவர் Nivetha P
    Aug 17, 2023
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் நேற்று(ஆகஸ்ட்.,17) பேசியதாவது, தமிழகத்தில் ட்ரோன் தயாரிக்கும் நிறுவனங்கள் பேட்டரி, மோட்டோர்கள் போன்ற உதிரி பாகங்களை வெவ்வேறு பரிசோதனை மையங்களில் வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

    இதனால் சோதனை செய்யும் காலம் அதிகரிப்பதோடு, இதற்கான செலவும் அதிகமாகிறது என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற இடையூறுகள் ஏற்படும் காரணத்தினால் தற்போது மத்திய அரசின் உட்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ட்ரோன் பரிசோதனை மையத்தினை அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்(TIDCO) திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    சோதனை 

    சிப்காட் தொழில் பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது

    அதன்படி இதனை மத்திய அரசின் மானியம் கொண்டு செயல்படுத்த டிட்கோ நிறுவனம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.

    இதனை தொடர்ந்து டிட்கோ'வுடன் இணைந்து அவீஷா ரீடெய்லர்ஸ், சென்ஸ் இமேஜ், கெல்டிரான், ஸ்டேண்ட்ரட் டெஸ்டிங் அண்ட் காம்ப்ளையன்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் ரூ.45 கோடி செலவில் இந்த ட்ரோன் சோதனை மையத்தினை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த சோதனை மையமானது ஸ்ரீபெரம்பத்தூர் அருகேயுள்ள வல்லம் வடக்காலில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது என்று கூறப்படுகிறது.

    மேலும் ட்ரோனின் ஆராய்ச்சி, மேம்பாடு, வடிவமைப்பு, சோதனைகள் மற்றும் உற்பத்திக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒரே இடத்திலேயே சர்வதேச தரத்தில் அமையவுள்ள இந்த சோதனை மையம் மூலம் பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தமிழ்நாடு

    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம் ஈரோடு
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் பிரதமர் மோடி
    புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து  அரசு மருத்துவமனை

    சென்னை

    மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள்  தமிழ்நாடு
    வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு  சுற்றுலா
    தக்காளியின் விலை திடீர் சரிவு - வரத்து அதிகரிப்பு  தமிழ்நாடு
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ் ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025