NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசிய கொடியேற்றினார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசிய கொடியேற்றினார்
    74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லியில் பிரதமர் முன்னிலையில் குடியரசு தின விழா அணிவகுப்புகள்

    74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசிய கொடியேற்றினார்

    எழுதியவர் Nivetha P
    Jan 26, 2023
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நாட்டின் குடியரசு தினம் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நமது நாட்டிற்கு விடுதலை கிடைத்தது.

    அதனை தொடர்ந்து, நமது தேசத்திற்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    நமது நாடு முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்த நாளான ஜனவரி 26ம்தேதியை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

    அதன்படி, 74ம்ஆண்டு குடியரசு தினமான இன்று சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமை பாதையில் (ராஜ பாதை) நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் தேசிய கொடியினையேற்றி வைத்தார். அவர் தேசிய கொடி ஏற்றுகையில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.

    சென்னையில் குடியரசு தினம்

    பிரதமர் முன்னிலையில் குடியரசு தின விழா அணிவகுப்புகள்

    ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வர்.

    அதன்படி பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியையேற்றிய பிறகு அணி வகுப்புகள் காலை 10.30 மணியளவில் துவங்கியதாக கூறப்படுகிறது.

    கடமை பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே துவங்கிய அணிவகுப்பு, விஜய் சவுக், இந்தியாகேட், செங்கோட்டைவரை செல்லும் என்பது குறிப்பிடவேண்டியவை.

    இதனைதொடர்ந்து, சென்னை மெரினாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகொடியினை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவைகளோடு இந்தாண்டு பெண்காவலர்களின் முரசு இசை நிகழ்ச்சி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடியரசு தினம்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    குடியரசு தினம்

    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் இந்தியா
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு காவல்துறை
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா

    பிரதமர் மோடி

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! மோடி
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு இந்தியா
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025