Page Loader
இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,90,054) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Sindhuja SM
May 29, 2023
11:53 am

செய்தி முன்னோட்டம்

நேற்று(மே-28) 403ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 310 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 4,709ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.01 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,90,054) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,866 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 2 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

details

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் மே 27ஆம் தேதி 425 பாதிப்புகளும், மே 26ஆம் தேதி 490 பாதிப்புகளும், மே 25ஆம் தேதி 535 பாதிப்புகளும் மே-24ஆம் தேதி 552 பாதிப்புகளும் மே 23ஆம் தேதி 405 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,53,479ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 571 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 98.80 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,812 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,67,07,591 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 500 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.