Page Loader
இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 
இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,92,293) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Jun 08, 2023
12:13 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஜூன் 7) 214ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 199ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 2,687ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.01 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,92,293) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,886ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் 2 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

detaisl

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் ஜூன் 6ஆம் தேதி 124 பாதிப்புகளும், ஜூன் 5ஆம் தேதி 174 பாதிப்புகளும் ஜூன் 4ஆம் தேதி 202 பாதிப்புகளும், ஜூன் 2ஆம் தேதி 267 பாதிப்புகளும், ஜூன் 1ஆம் தேதி 288 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,57, 720ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 341 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,680 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,67,28,000 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,680 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.