NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்கள்தொகை எண்ணிக்கை: சீனாவை முந்தியதா இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்கள்தொகை எண்ணிக்கை: சீனாவை முந்தியதா இந்தியா
    2050ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்.

    மக்கள்தொகை எண்ணிக்கை: சீனாவை முந்தியதா இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Jan 18, 2023
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்திருந்தாலும், கிட்டத்தட்ட 2050ஆம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று உலக மக்கள்தொகை மதிப்பாய்வு தெரிவித்துள்ளது.

    இந்த அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2022ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள்தொகை 1.417 பில்லியனாக இருந்தது. இது சீனாவின் மக்கள் தொகையை விட 5 மில்லியன் அதிகமாகும். சீன மக்கள்தொகை வீழ்ச்சி அடைந்திருப்பதால் இந்த ஏற்றம் தெரிகிறது.

    மேக்ரோட்ரெண்ட்ஸ் என்ற ஆராய்ச்சி தளத்தின் மற்றொரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 1.428 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    ஆகவே, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் எண்ணிக்கை சீனாவின் மக்கள் தொகை எண்ணிக்கையை விட இன்னும் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.

    மக்கள்தொகை

    எந்தெந்த நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும்?

    மறுபுறம், தேசிய புள்ளியியல் பணியகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, சீனாவின் மக்கள்தொகை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 2022 இல் 850,000 குறைந்துள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபை அதன் மதிப்பீட்டில், 2022 முதல் 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகை வெகுவாக அதிகரிக்கும் என்று கூறி இருக்கிறது. இந்த அதிகரிப்பு வெறும் எட்டு நாடுகளில் மட்டுமே காணப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

    குறிப்பிடப்பட்ட அந்த 8 நாடுகளின் பெயர்கள்: காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா.

    ஆனால், சீனா தற்போது அதன் மக்கள்தொகையை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. அதிக பிறப்புகளை ஊக்குவிக்கம் வகையில் வரி விலக்குகள், நீண்ட மகப்பேறு விடுப்பு மற்றும் வீட்டு மானியங்களை வழங்க தொடங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள் பொழுதுபோக்கு
    மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம் இந்தியா
    இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உலக செய்திகள்
    கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு ரஜினிகாந்த்

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா

    உலகம்

    இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா! அமெரிக்கா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு! உலகம்
    சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025