Page Loader
இந்தியாவில் ஒரே நாளில் 9,629 கொரோனா தொற்று: நேற்றைவிட 44% அதிகரிப்பு 
இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி(4,49,15,456) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 9,629 கொரோனா தொற்று: நேற்றைவிட 44% அதிகரிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Apr 26, 2023
12:04 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஏப்-25) 6,934ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 9,629ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 61,013 ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.14 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி(4,49,15,456) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,398 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 29 இறப்புகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 24ஆம் 7,178, பாதிப்புகளும்,ஏப்ரல் 23ஆம் 10,112 பாதிப்புகளும், ஏப்ரல் 22ஆம் தேதி 12,193 பாதிப்புகளும், ஏப்ரல் 21ஆம் தேதி 11,692 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

details

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,43,23,045 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 11,967 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 5.38 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 5.61 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.68 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,79,031 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,50,086 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,407 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.