NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை 
    இஸ்ரேலில் போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 07, 2023
    03:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளிகள் நடத்திய மிகப்பெரும் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் 'போர் நிலை' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கான அறிவுரையை வெளியிட்டுள்ளது.

    இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த அறிவுரையில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    "இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தயவுசெய்து எச்சரிக்கையுடன் செயல்படவும், தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும். மேலும், பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு அருகில் இருக்கவும்" என்று தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பிகேவ்ஜ்

    இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பாலஸ்தீன போராளிகள்

    மேலும், அவசரநிலை ஏற்பட்டால் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு தூதரக அதிகாரிகள் இந்திய குடிமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இன்று அதிகாலை காசா பகுதியில் இருந்து இடைவிடாத ராக்கெட் தாக்குதலை நடத்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள், தெற்கு இஸ்ரேலின் சில பகுதிகளுக்குள் ஊடுருவினர்.

    இதனால், இஸ்ரேலில் போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலைமை தீவிரமடைந்ததால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர், "நாம் போரில் இருக்கிறோம், நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்." என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், இஸ்ரேலும் பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் இரும்பு வாள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  பயங்கரவாதம்

    இந்தியா

    இன்று முதல் உயர்கிறது இங்கிலாந்துக்கான விசா கட்டணம்; மாணவர்களின் கல்வி கட்டணம் பாதிக்குமா? இங்கிலாந்து
    இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் அறிமுகம் விமானம்
    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த குஜராத் மருத்துவர்கள் மருத்துவத்துறை
    உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர்  சென்னை

    உலகம்

    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர் சீனா
    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  கனடா
    கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை இந்தியா
    'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன? சீனா
    அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்  வட கொரியா
    சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து கனடா
    இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025