NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு
    உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம் - உலக சுகாதார அமைப்பு தகவல்

    உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு

    எழுதியவர் Nivetha P
    Nov 09, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகளவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 75 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    உலகம் முழுவதும் 192 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

    அதன்படி, உலகளவில் இது கடந்த 1995ம் ஆண்டு முதல் காசநோயால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்ததை விட அதிக எண்ணிக்கை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2022ல் புவியியல் ரீதியாக காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்கிழக்கு ஆசியா(46%), ஆப்ரிக்கா(23%), மேற்கு பசிபிக் பிராந்தியம்(18%) உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளது.

    பாதிப்பு குறைவான பகுதிகளாக அமெரிக்கா(3.1%), ஐரோப்பா(2.2%), கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி(8.1%) உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

    காசநோய் 

    'புரிதல் இல்லாததால் இந்நோய் நமது முன்னோர்கள் காலகட்டத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது' - உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்

    மேலும், புதிதான பாதிப்புகளின் எண்ணிக்கையினை குறைக்கும் நாடுகளுள் 2020-2021ம் ஆண்டுகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகள் முன்னிலை வகிக்கிறது.

    உலகளவில் காசநோய் பாதிப்புகளை குறைக்கும் விகிதத்தில் இந்நாடுகள் 60%பங்கினை பெற்றுள்ளது.

    இதனிடையே, இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறுகையில், 'காசநோய் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான புரிதல் நமது முன்னோர்களுக்கு இல்லாத காரணத்தினால் அவர்கள் உயிரிழப்புகளை சந்தித்தனர்' என்றும்,

    'ஆனால் தற்போது இந்நோய் பாதிப்பினை கண்டறிய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. அதனால் இந்நோய்கான இறுதி அத்தியாயத்தினை எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது' என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    கடந்த 2021ம் ஆண்டு எச்.ஐ.வி.நோய்தொற்று உள்பட காசநோய் பாதிப்புடைய மரணங்கள் உலகளவில் 1.4 கோடியாக இருந்த நிலையில், 2022ல் 13 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார் வணிகம்
    இந்தியாவில் அதிகரித்த ஐபோன் விற்பனை.. முதலீட்டாளர் கலந்துரையாடலில் டிம் குக் ஆப்பிள்
    அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது அமெரிக்கா
    இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது  இலங்கை

    உலகம்

    உலக உணவு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவங்கள் என்ன ?  இந்தியா
    கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு  கும்பகோணம்
    சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கனடா

    தொழில்நுட்பம்

    AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை இந்தியாவிற்கும் விரிவுபடுத்திய கூகுள் கூகுள்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Google-க்கு வயது 25, பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை! கூகுள்
    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா? செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா இந்தியா
    தகவல் திருட்டுக்கு வாய்ப்பு, அனைத்து செயலிகள் மற்றும் மென்பொருட்களை அப்டேட் செய்ய வலியுறுத்தல் தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய சுவையை உருவாக்கிய கோகோ கோலா செயற்கை நுண்ணறிவு
    பொது இடங்களில் இரத்த தான மையம், பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு விருதுநகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025